அக்னி குண்டத்தில் சிக்கி தவிக்கும் திருத்தணி, வேலூர், மதுரை, கரூர்.. 107 டிகிரி F.. மக்களே உஷார்
சென்னை: திருத்தணி, வேலூர், மதுரை, கரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் வெயில் 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்டு செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கோடை காலத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி 117 டிகிரி பாரன்ஹீட் வரை செல்வதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான இடங்களில் தகிக்கும் வெப்பம் மிரட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி சென்னை வானிலை மையம் தமிழகத்தின் சில இடங்களில் எந்த அளவுக்கு வெப்பம் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை
அதன்படி அதிராமபட்டினத்தில் 95.9 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட்டும் கோவையில் 99 டிகிரி வெப்பநிலையும் தருமபுரியில் 102 டிகிரி பாரன்ஹீட்டும் கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகும். அது போல் மதுரையில் 102 டிகிரி பாரன்ஹீட்டும் மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சம்
நாகையில் 99 டிகிரி பாரன்ஹீட்டும், பாளையம்கோட்டையில் 102 டிகிரி பாரன்ஹீட்டும் சேலத்தில் 105 டிகிரி பாரன்ஹீட்டும் தஞ்சை, திருச்சி, திருத்தணி ஆகிய பகுதிகளில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அது போல் வேலூரிலும் அதிகபட்சமாக 107.26 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.

மின் பயன்பாடு
வேலூர், திருத்தணி, தஞ்சை, சேலம், மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலையாக 102 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் கண்ணை பறிக்கும் அளவுக்கு வெப்பம் இருக்கும். அண்மையில் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க வீடுகளில் மின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது.

மின் கட்டணம்
24 மணி நேரமும் ஃபேன் ஓடியது ஓடியபடியே இருக்கிறது. மேலும் வீட்டு ஏசிக்களும் இரவு நேரத்திலும் முழுவதும் ஓடுகிறது. இதனால் மின் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டிய அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே வேலை செய்து வருவதால் வழக்கமான கோடையை விட மின்கட்டணம் எகிறும் நிலை உள்ளது. அதே வேளையில் அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாததால் மின் கட்டணம் குறையும் நிலை உள்ளது. கொரோனா ஊரடங்கால் பணியில்லாமலும் ஊதியம் இல்லாமலும் மின் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என விழிபிதுங்கி நிற்கின்றனர் தமிழக மக்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications