வைகோவுடன் ராஜ்யசபாவுக்கு வேல்முருகனையும் அனுப்புங்க... வலுக்கும் கோரிக்கை
சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனையும் ராஜ்யசபா எம்.பி.யாக்க வேண்டும் என திமுக தலைமையை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெற்றது. அக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாத போதும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வேல்முருகன் பிரசாரம் செய்தார்.

குறிப்பாக கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், திருமாவளவன் வெற்றியை உறுதி செய்தது வேல்முருகனின் பிரசாரம் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளின் கருத்து. இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு திருமாவளவன், கனிமொழி, ஆ, ராசா என தமிழர் வாழ்வுரிமை மீது அக்கறை கொண்ட பலரும் செல்கின்றனர்.
அதேபோல் ராஜ்யசபாவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ செல்ல இருக்கிறார். ஆகையால் இவர்களுடன் த.வா.க. தலைவர் வேல்முருகனையும் திமுக ராஜ்யசபாவுக்கு அனுப்பினால் தமிழக உரிமைகளை மீட்க உரத்து குரல் எழுப்பலாம் என தமிழார்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications