ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் வேண்டாம்!முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலைக்காக வேல்முருகன் குரல்
ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் வேண்டாம் என வேல்முருகன் வேண்டுகோள்.
சென்னை: இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுள் தண்டனை என்பது சட்டப்படி ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது என்றாலும், அச்சிறைவாசிகளின் தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ முழுமையாக அதிகாரத்தை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை என்பது சட்டப்படி ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது என்றாலும், அச்சிறைவாசிகளின் தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ முழுமையாக அதிகாரத்தை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. குற்றவியல் சட்டம் 432 அடிப்படையில் தண்டனை குறைப்பதற்கு ஒன்றிய அரிசன் ஒப்புதல் வேண்டும். அதே நேரத்தில், அரசியல் சட்டப்பிரிவு 161ன் அடிப்படையில் முன் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டாலும், மாநில அரசுகளுக்கு முன் விடுதலை செய்வதற்கு உரிமை உண்டு.

இருபது ஆண்டுகள் சிறைவாசம்
இருபது ஆண்டுகள் சிறைவாசம் கழித்தவர்களை விடுதலை செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு முன் விடுதலை திட்டத்தை 1994இல் கொண்டு வந்தது. எவ்வளவு பெரிய குற்றங்களை செய்தவர்களாக இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் முன் விடுதலை செய்ய முடியும். முக்கியமாக, ஒரு மாநில அரசு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய முடியும். அண்ணா பிறந்த நாள், அண்ணா நூற்றாண்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு என்ற பல நிகழ்வுகளில் பத்து ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகள் தமிழ்நாட்டின் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நான் வைத்த கோரிக்கை
2008ஆம் ஆண்டு, சட்டமன்றத்தில் நான் (தி.வேல்முருகன்) வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 1,400 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆரின் 100வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்த 1,627 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அப்போது சில இசுலாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

எஞ்சிய வாழ்நாள்
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் 38 இசுலாமிய சிறைவாசிகள், 27 முதல் 28 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
சிறை விதிகளின் படி சிறைவாசிகளுக்கு வழங்கும் பரோல் விடுவிப்பு கூட, இசுலாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலர் 60 வயதைக் கடந்தவர்களாகவும் நோயாளிகளாகவும் உள்ளனர். சிறையில் இருந்து வந்தாலும் நல்ல உடல்நலனோடு அவர்கள் வாழ முடியாது. அவர்களது எஞ்சிய வாழ்நாளையாவது குடும்பத்துடன் செலவிட விரும்புகிறார்கள்.

கருணையின் அடிப்படையில்
எனவே, கடந்த காலங்களில் சிறைவாசிகள் விடுதலையில் நிகழ்த்தப்பட்ட பாரபட்சங்கள் கடந்து இசுலாமிய சிறைவாசிகள், 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகளை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில், கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய, மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக, நிறைய இசுலாமிய சிறைவாசிகள் குற்றம் செய்யாமலேயே நீண்ட காலமாக சிறையில் வாடுகின்றனர். இதனை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு, இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications