கூடுவாஞ்சேரியில் ஈரக்குலை நடுங்கும் சம்பவம்.. 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை
சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த காரணி புதுச்சேரி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (17). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இவர் வீட்டில் இருந்த போது இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் இவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த தனுஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீஸார் சுற்றுலா வேன் உரிமையாளர் தனசேகர் (28), அவரது நண்பர் வினோத் (26) ஆகிய இருவரை கைது செய்தனர்.
சிறுவனை கொலை செய்தது ஏன் என்பது குறித்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications