துணைவேந்தர்கள் நியமன வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டங்களை எதிர்த்த வழக்கை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சட்டங்களை எதிர்த்த வழக்கில் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் தாக்கல் செய்த மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த பா.ஜ. மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் வெங்கடாச்சலபதி அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த தகவலை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்மொழி அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் ஒப்புதல் வழங்காத சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் கே.வெங்கடாஜலபதி எந்த பொதுநலனும் இல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், மனுதாரர் திருநெல்வேலி பாஜக மாவட்ட செயலாளராக இருந்தவர் தற்போது பாஜக வழக்கறிஞராக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஒன்பது சட்டங்களை எதிர்த்து விடுமுறை காலத்தில் மனுத்தாக்கல் செய்ய அவசியமில்லை எனவும், கடந்த மாதம் 11 ஆம் தேதி சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் 30 ஆம் தேதி வரை வழக்கு தொடராமல் தற்போது விடுமுறை கால நீதிமன்றத்தில் தொடர்ந்தது ஏன்? ஏன் இந்த அவசரம் என்பது குறித்து மனுதாரர் மனுவில் எதையும் குறிப்பிடாதது ஏன்?.
ஒன்பது சட்டங்களை எதிர்த்து ஒரே வழக்காக எப்படி தாக்கல் செய்ய முடியும்? உரிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்தாமல் ஒரே மனுவில் பல நிவாரணங்களை எப்படி கேட்க முடியும். ஒன்பது சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் பல்கலைக்கழகங்களை எதிர்மனுதாரர்களாக ஏன் சேர்க்கவில்லை?. பதில்மனு தாக்கல் செய்ய உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மாற்றக் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமரும் முன்பு ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பிஎஸ் ராமன் இந்த வழக்கு குறித்து முறையீடு ஒன்றை மேற்கொண்டார்.
அப்போது, தமிழக அரசின் உயர் கல்வித் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சனும் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி, உச்ச நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை நான்கு மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications