அந்தரத்தில் தொங்கியபடி.. மின் ஊழியர் செய்த துணிச்சலான காரியம்.. பரபரப்பு வீடியோ
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மின் வாரிய ஊழியர் ஒருவர், மின் வயரில் தொங்கிய தென்னை மட்டையை அந்தரத்தில் தொங்கியபடி துணிச்சலுடன் அகற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அண்மை கால ஆண்டுகளில் இல்லாத ஒரு நிகழ்வாக வைகை, முல்லை பெரியாறு அணைகள் முதல்போக பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையும் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
கன மழை பெய்து வருவதன் காரணமாக மின்சார கம்பங்கள் அடிக்கடி பழுதாகி மின் தடை ஏற்படுவது உண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் மின் ஊழியர்களின் பணி மகத்தானது.
தங்கள் உயிரை பணயம் வைத்து மின்சார ஊழியர்கள் பழுதை சரி செய்து நமக்கு மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எந்த இடம் என்று தெரியவில்லை.. வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் மின்வாரிய ஊழியர் ஒருவர் வயர்களில் அந்தரத்தில் தொங்கியபடி அங்கு சிக்கியிருந்த தென்னை மட்டையை அகற்றினார். இந்த வீடியோ இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.