கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூல்.. வடபழனி இன்ஸ்பெக்டர் வீடியோ வைரல்.. உடனே ஆக்ஷன்
சென்னை: சென்னை வடபழனி இன்ஸ்பெக்டர் கண்ணன், கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷ்னர் தினகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மது விற்பனை சென்னையில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெறவில்லை. கடந்த 18ம் தேதி தான் மதுக்கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு மதுவிற்பனை செய்யப்படுகிறது.

கள்ளச்சந்தையில் மது
இந்நிலையில் சென்னையில் கள்ளச்சந்தையில் மது மற்றும் கஞ்சா விற்பனை ஆங்காங்கே நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீசார் அடிக்கடி ரெய்டு நடத்தி அவர்களை கைது செய்து வருகிறார்கள்.

சென்னையில் மது விற்பனை
சென்னை வடபழனி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வடபழனி சன்னதி தெருவில் பூட்டப்பட்டிருந்த திருமண மண்டபத்திறகு வடபழனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் லஞ்சம்
இந்நிலையில் கள்ளச்சந்தையில் மது மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலர் இன்ஸ்பெக்டர் கண்ணனை நேரில் சந்தித்து மாமூல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்படி லஞ்சம் வாங்கியதாக சொல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காத்திருப்போர் பட்டியல்
அந்த வீடியோவில் கண்ணன் யாரிடமோ பணம் வாங்குவதாக வீடியோ உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் வெளியானதை அடுத்து சென்னை வடபழனி இன்ஸ்பெக்டர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷ்னர் தினகரன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications