Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ED அதிகாரி அங்கித் திவாரி பற்றி பரபரப்பு தகவல்.. மணல் குவாரி அதிபர்களிடமும் பணம் கேட்டு மிரட்டினாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி, லஞ்ச ஒழிப்புத்துறையின் எஃப்.ஐ.ஆரில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018 இல் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், டாக்டர் சுரேஷ் பாபுவிடம் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு ரூ.3 கோடி லஞ்சம் தருமாறு மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார்.

Vigilance fir opens sensational informations about ED officer ankit tiwari

திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கித் திவாரி 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இது குறித்து மருத்துவர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையிலான காவல் துறையினர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி, அவரையும் கைது செய்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிபட்டதை அடுத்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் தகவல் அறிக்கை: இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அங்கித் திவாரி பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர், திண்டுக்கல் டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்டியது தொடர்பாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது சேவையை களங்கப்படுத்திவிடுவதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். லஞ்சம் தராவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அரசு மருத்துவரை மிரட்டியுள்ளார். உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணத்தில் பங்கு தர வேண்டும் எனக் கூறி மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டியுள்ளார் அங்கித் திவாரி.

மேலும், திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர். திண்டுக்கல் அரசு மருத்துவர் லஞ்சப் பணத்தை தயார் செய்துவிட்டு தொடர்பு கொண்டபோது மணல் குவாரியில் இருப்பதாக அங்கித் திவாரி கூறியுள்ளார்.

மணல் குவாரி அதிபர்களிடம் பேரம்?: ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால், மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் பகுதி தொழிலதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, அங்கித் திவாரி, மணல் குவாரி அதிபர்களிடமும் லஞ்சம் கேட்டு மிரட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், லஞ்ச பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என திண்டுக்கல் மருத்துவரிடம் அங்கித் திவாரி கேட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையின் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+