"நாம ஆட்சிக்கு வந்தா.. அதென்ன வந்தா.. நிச்சயம் வருவோம்” விஜய் பேச்சால் உற்சாக ஆரவாரம்!
சென்னை: "நாம ஆட்சிக்கு வந்தா.. அதென்ன வந்தா.. வருவோம்.. மக்கள் கண்டிப்பா நம்மை ஆட்சிக்கு வர வைப்பார்கள். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வர வைக்கத்தானே செய்வாங்க.. " எனப் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய். விஜய் பேச்சால் தவெகவினர் உற்சாக ஆரவாரம் செய்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பரப்புரையின்போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கட்சியின் பிரச்சாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வந்த விஜய், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், மீண்டும் மக்களைச் சந்தித்து வருகிறார் விஜய்.
இன்று காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியில் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்து வருகிறார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,000 தவெக தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், "மிகப்பெரிய மனவேதனைக்குப் பின்னர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. தனிப்பட்ட முறையில் தி.மு.க மீது எந்த வன்மமும் இல்லை. மக்களை பொய் சொல்ல ஏமாற்றி ஆட்சி வந்த தி.மு.க.வை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?
மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யார்? த.வெ.க.விற்கு கொள்கையில்லை என பேசுகிறார் தமிழக முதலமைச்சர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா? கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என கூறிய த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய விஜய், "நாம ஆட்சிக்கு வந்தா.. அதென்ன வந்தா.. வருவோம்.. மக்கள் கண்டிப்பா நம்மை ஆட்சிக்கு வர வைப்பார்கள். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வர வைக்கத்தானே செய்வாங்க.. மக்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற விளக்கத்தை தேர்தல் அறிக்கையில் கொடுப்போம்" எனப் பேசினார். விஜய் பேச்சால் தவெகவினர் உற்சாக ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications