விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக!
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மணிப்பூர் ஆளுநருக்கு சிடிஆர் நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஓய்வு பெற்றது கூட தெரியாமல் தவெக கடிதம் எழுதி இருப்பது சாமானிய மக்களிடையே கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதற்காக மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த விஜய், உடனடியாக பிரச்சாரத்தை தொடங்கினார். பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனால் அதிகளவில் கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் விஜய்யின் வாகனம் நகர கூட முடியாத நிலையில் சிக்கியது. இதனால் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாக நடக்கவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதன்பின் கடந்த 2 நாட்களாக விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருக்கிறார்.
அதேபோல் விஜய்க்கு போதிய பாதுகாப்பை காவல்துறை வழங்கவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு கடிதம் அனுப்பினார். அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறைபாடு இருப்பதாக மத்திய உள்துறை செயலாளருக்கு தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆனால் அந்த கடிதத்தின் இடம்பெற்றுள்ள பெயர் தான் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. தவெக தரப்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மத்திய உள்துறை செயலாளராக அஜய் பல்லா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அஜய் பல்லா 2024லேயே ஓய்வு பெற்றுவிட்டார். இதன்பின் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஜய் பல்லா மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் செயல்பட்டு வருகிறார். இதனால் தவெக சார்பாக மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓய்வு பெற்ற அதிகாரியை கூட தெரியாமல் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கடிதம் எழுதி இருப்பது பல்வேறு கட்சியினரால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடிதம் திரும்பி வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
-
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி












Click it and Unblock the Notifications