Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடி கொட்டிய பிறகு அரசியலுக்கு வர்றாங்க.. முதல்ல இதை பண்ணுங்க.. விஜய்யை அட்டாக் செய்த வீரலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வயசான காலத்தில் தலையில் முடி கொட்டி போன பிறகு அரசியலுக்கு வருகிறார்கள் என்றும், உங்க பணத்தை பாதுகாப்பதற்குதான் நீங்க அரசியலுக்கு வருகிறீர்கள் என்றும் நடிகர் விஜயை தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி விமர்சித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று விஜய் அறிவித்துள்ளார். தற்போது கட்சியை பலப்படுத்த முயற்சிகளை செய்து வருகிறார்.

Vijay Veeralakshmi tvk Tamil Nadu

இந்த நிலையில் விஜய் வயசான காலத்தில் தலையில் முடி கொட்டி போன பிறகு அரசியலுக்கு வருகிறார் என்றும், அவருடைய பணத்தை பாதுகாக்க தான் அரசியலுக்கு வருவதாகவும் தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி கூறினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

நடிகர்கள் வயசான காலத்தில் தலையில் முடி கொட்டி போன பிறகு அரசியலுக்கு வருகிறார்கள். நான் என்ன கேட்கிறேன் என்றால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் பணம் தான் இல்லை. ஆனால் நடிகர்கள் சினிமாத்துறையில் சம்பாதித்த பணத்தை தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆரம்ப பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள்.

முதலில் உங்க பணத்தை மக்களுக்கு செலவு செய்யுங்கள். உங்க ரசிகர்களுக்கு செலவு செய்யுங்கள். அதை விட்டுட்டு நேராக அரசியலுக்கு வருகிறீர்கள் என்றால் உங்க பணத்தை பாதுகாப்பதற்குதான் நீங்க அரசியலுக்கு வருகிறீர்கள். நடிகர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள்.

விஜய் குடும்ப நிகழ்ச்சியில் வெள்ளி தட்டில் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் என்று பாடகி சுசித்ரா ஓபனாக சொல்லியிருக்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் நீங்கள் தமிழக மக்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் டிரக்ஸ் சப்ளை பண்ண போகிறேன் என்று சொல்கிறாரா? அல்லது கொக்கைன் சப்ளை பண்ண போறீங்களா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் எல்லோரையும் போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்த போறீங்களா? இன்னைக்கு இளைஞர்கள் எல்லோரும் தெளிவாக இருக்கிறார்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக உள்ளனர். ஆனால் நடிகர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்கவே அரசியலுக்கு வருகிறார்கள்.

பாடகி சுசித்ரா சொன்ன போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளரிடம் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். அந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் தென்னிந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு யார் யார் கொக்கைன் பயன்படுத்தினார்களோ அவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்ற படை முன்னெடுத்துள்ளது.

விஜய் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நான் சொல்லவில்லை. அவர்கள் கேங்கில் இருந்த சுசித்ரா ஓபனாக ஒரு ஊடகத்தில் சொல்கிறார். இதில் ஆதாரம் இருக்கிறது இல்லை என்பது அப்பாற்பட்ட விஷயம். காவல்துறை சுசித்ரா மீது அடிப்படை விசாரணை மேற்கொள்ளவில்லை என்றுதான் நான் கேட்கிறேன்.

இதுவே ஒரு பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தினால் உடனடியாக காவல்துறை பயன்படுத்தி ரிமாண்ட் செய்கிறார்களா இல்லையா.. அதுபோல இந்த விவகாரத்தில் காவல்துறை ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+