ஜனநாயகன் பிரச்சனை.. "மனதளவில் ரெடியா இருந்தேன்".. NDTVக்கு பேட்டி கொடுத்த விஜய்!
சென்னை: NDTV தலைமை ஆசிரியர் ராகுல் கன்வால் மற்றும் குழுவினர் தவெக தலைவர் விஜய்யுடன் 45 நிமிட உரையாடலை நடத்தியுள்ளனர். அதில் விஜய் 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் குறித்து கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கரூர் துயரச் சம்பவம் தனக்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் என்டிடிவி ஊடகத்தின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், சென்னையில் நடைபெற்ற இந்த ஊடக நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யை என்.டி.டி.வி குழுவினர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

நீங்கள் ஒரு கிங்மேக்கரா? என என்.டி.டிவி குழுவினர் எழுப்பிய கேள்விக்கு, "நான் போராடி வெற்றி பெறுவேன். நான் ஏன் ஒரு கிங்மேக்கர் என்று நினைக்கிறீர்கள்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் எனது ரோல் மாடல்கள். நான் என் சினிமா கரியரை திட்டமிட்டே கைவிட்டேன். அது எளிதானது அல்ல. இப்போது என் கவனம் மக்களின் பிரச்சனைகள் மீது உள்ளது." என தவெக தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், "கொரோனா காலத்திற்குப் பிறகு அரசியலைப் பற்றி நான் மிகவும் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். இது திடீரென எடுத்த முடிவு அல்ல. என் தந்தை அரசியல் இயக்குநராக இருந்தவர். அதனால் இந்த உலகத்தை அருகிலிருந்தே பார்த்தும் புரிந்தும் நான் வளர்ந்தேன். 33 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவை நான் மனப்பூர்வமாக கைவிட்டுள்ளேன். அது எளிதான முடிவு அல்ல. ஆனால் முடிவு எடுத்துவிட்டேன். நீண்ட பயணத்திற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன்." என விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் படம் சிக்கலில் உள்ளது. அரசியலில் நுழைந்தது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதித்ததா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள விஜய், "என் அரசியல் நுழைவால் ஜனநாயகன் பட ரிலீஸ் பாதிக்கப்படுவதால் என் தயாரிப்பாளருக்காக வருத்தமாக இருக்கிறது. என் அரசியலால் படங்கள் பாதிக்கப்படலாம் என்று நான் முன்பே எதிர்பார்த்தேன். அதற்காக மனதளவில் நான் தயாராகவும் இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இது தான் தேசிய ஊடகத்துடன் எனது முதல் உரையாடல். இதை நான் ஒரு mock interview போன்றே பார்க்கிறேன். நான் போதுமான அளவு பேசவில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், நான் என் உரைகளின் மூலம் பேசிக்கொண்டே இருக்கிறேன். நான் எப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். சரியான நேரத்தில் நான் ஊடகங்களிடம் பேசுவேன்." என விஜய் தெரிவித்ததாக என்.டி.டி.வி செய்தி ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
-
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
விஜய் கட்சி வேட்பாளர் தனிமையில் தவிப்பு.. தவெகவில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? திருத்தணியில் இப்படி? -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!











Click it and Unblock the Notifications