Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரம்பூர் பிரச்சாரம் நேற்று சொதப்பியதால் விஜய் கடும் கோபத்தில் இருக்கிறாராம். பிரச்சார திட்டத்தை மோசமாக திட்டமிட்டதால் விஜய் புஸ்ஸி ஆனந்த் மீதும், ஆதவ் அர்ஜுனா மீதும் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

பெரம்பூரில் நேற்று தொடங்கியிருக்க வேண்டிய அந்த 'பவர்ஃபுல்' பிரசாரம், பாதியிலேயே முடிவுக்கு வரும் என்று தவெக நிர்வாகிகள் கனவிலும் நினைக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கையோடு பெரம்பூர் தெருக்களில் புயலெனக் கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது என்னவோ வேறு!

tamil nadu assembly elections 2026 tvk

மிஸ்ஸான 'மாஸ்டர் பிளான்'!

நேற்று மதியம் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் ஒட்டுமொத்த அட்டவணையும் 'கொலப்ஸ்' ஆனது. திரண்ட கூட்டத்தைக் கையாள முடியாமல் தவித்த கட்சியின் தன்னார்வலர்கள் ஒருபுறம், வாகன நெரிசலில் சிக்கிய தலைவர் மறுபுறம் என களமே களேபரமானது. இறுதியில், பாதுகாப்பு மற்றும் நேரமின்மை காரணமாக மாலை நேரக் கூட்டங்கள் மொத்தமாக ரத்து செய்யப்பட்டன.

இன்று காலை முதலே பிரசாரக் களம் சூடுபிடிக்க வேண்டும். ஆனால், நேற்றைய கசப்பான அனுபவத்திற்குப் பிறகு, இன்றைய அட்டவணை 'வெற்றுத் தாளாகவே' இருக்கிறது. இன்று இந்த நொடி வரை கூட்டம் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதுவரை விஜய் வெளியே வருவாரா என்று தெரியவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு நிமிடமும் பொன்னானது. ஆனால், தவெக தரப்பில் 'பிளானிங்' கோட்டை விட்டதால் இன்று ஒரு நாள் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

விஜய் இப்போது ஆக்டிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் அவர் இப்போது பிரச்சாரம் செய்யாமல் வீட்டில் முடங்கி உள்ளார்.

ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் கவனம் எங்கே?

கட்சியின் முக்கியத் தூண்களாகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு இங்கே ஒரு முக்கியப் பொறுப்பு இருக்கிறது. தற்போது கட்சியின் முகமாக இவர்கள் அளவுக்கு அதிகமாக 'ஃபோகஸ்' செய்யப்படுகிறார்களோ என்ற கேள்வி தம்பிமார்களிடையே எழுந்துள்ளது.

"அரசியல் வியூகங்களை வகுப்பதும், ஊடக வெளிச்சத்தில் இருப்பதும் ஒரு பக்கம் இருந்தாலும், தலைவரின் பிரசாரம் தடையின்றி நடப்பதை உறுதி செய்வதுதான் இவர்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால் அவர்களும் தேர்தலில் நிற்பதால் அவர்களால் விஜயின் பிரச்சாரங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்றைய குளறுபடிகளுக்குப் பிறகு, இவர்களின் முழு கவனமும் பின்வரும் விஷயங்களில் மட்டுமே இருக்க வேண்டும்:

தினசரி பிரசாரம்: விஜய் தினமும் மக்களைச் சந்திப்பதை எந்தத் தடையுமின்றி உறுதி செய்ய வேண்டும்.

துல்லியமான திட்டமிடல்: எந்தத் தெருவில் எப்போது நுழைய வேண்டும், எங்கே முடிக்க வேண்டும் என்கிற 'மைக்ரோ லெவல்' பிளானிங் அவசியம்.

நேரம்... நெருப்பு போன்றது!

தேர்தல் களத்தில் நேரம் என்பது திரையில் ஓடும் 'கவுண்ட்டவுன்' போன்றது. மற்ற கட்சிகள் மின்னல் வேகத்தில் சுழலும்போது, தவெக தரப்பில் நிர்வாகக் குறைபாடுகளால் பிரசாரம் முடங்குவது வேட்பாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

இனியாவது தனிநபர் விளம்பரங்களைத் தவிர்த்துவிட்டு, தலைவரின் பிரசாரப் பாதையைச் சீரமைப்பதில் இவர்கள் கவனம் செலுத்துவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+