Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா?
சென்னை: திமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இணைந்த நிலையில் அந்த கூட்டணியை மக்கள் நல கூட்டணி என தவெக தலைவர் விஜய் கிண்டல் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் இன்று அறிவித்திருந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: இந்த கூட்டத்தை வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் என சொன்னார்கள்.
ஆனால் என்னை பொருத்தமட்டில் மக்களை காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண குடும்பம். பெரிய பேக்கிரவுண்ட் இல்லை என சொல்வார்கள். கூட்டம் சேர்ந்தால் ஓட்டாகுமா, சீட்டாகுமா என்றெல்லாம் கேட்பார்கள். இங்கு இருப்போர் சாதாரண குடும்பத்தினர் அல்ல, அரசியல் தெரிந்தவர்கள்தான்.
எனவே அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பவர்கள் கிடையாது. எம்எல்ஏன்னா சும்மா இல்லை. எல்லை காப்பானாக இருக்க வேண்டும். எம்எல்ஏ என்றால் தொகுதிக்கான எல்லைக்கான மக்கள் காப்பாளராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைதான் நான் தேர்வு செய்துள்ளேன்.
களத்தில் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய ஆட்களை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். எல்லாம் இடத்திலும் நான் செல்ல முடியாதுல்ல. நானே பார்த்து பார்த்து வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளேன்.... மக்களே இவர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு. நம்மளுடைய அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். அவர்களை வேட்பாளராக ஆக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு.
கூட்டம் ஒட்டா மாறதா என்று கேட்கிறார்கள். இந்த தேர்தல் எல்லாரும் சொல்லும் தேர்தல் கிடையாது. இது இருமுனை போட்டி மட்டும்தான். ஒன்னு இந்த மக்கள் கூட்டணியான டிவிகே, இன்னொன்று ஸ்டாலின் சார் கூட்டணி.
கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் கூச்சல் சத்தம் முடியவில்லை. விஜய்க்குலாம் என்னப்பா செல்வாக்கு இருக்கு, கூட்டத்தை வச்சி சொல்றீங்களா? அதெல்லாம் வேடிக்கை பார்க்க வரக்கூடிய கூட்டம் கூட்டம் வந்தால் பெரிய ஆளா, கூட்டம் ஓட்டா மாறுமா, ஓட்டு சீட்டா மாறுமா என வன்மத்தோடு கேள்வி கேட்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று தான் இந்த தேர்தல் எல்லாரும் சொல்வது போல் 4 முனை, 400 முனை எல்லாம் கிடையாது. இரு முனை போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் மட்டும்தான் இந்த தேர்தல்!
அதென்னப்பா ஸ்டாலின் சார் கூட்டணி பேரு, மக்கள் நலக் கூட்டணியா? மொத்த பேக்கேஜும் அங்கதான இருக்குது! ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சதாலயோ என்னவோ ஸ்டாலின் சார், மக்கள் நல கூட்டணியாகவே மாத்திட்டாரு.
உடைந்த கிளாஸை ஒட்ட வைத்த மாதிரி, கிழிந்த துணியை தைச்ச மாதிரி, இது ஒரு ஒட்டு போட்ட ஒரு கூட்டணி அவ்வளவுதான்! அதனால் நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருப்பது போல் உங்களது ஓட்டை சிந்தாம, சிதறாம நமது தவெக வேட்பாளர்களுக்கும் விசில் சின்னத்திற்கும் தயவு செய்து ஓட்டு போட்டுடுங்க! இவ்வாறு விஜய் பேசினார்.
விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, தேமுதிக, ஜி.கே.வாசன் ஆகிய கட்சிகள் இணைந்ததே மக்கள் நல கூட்டணி. இந்த கூட்டணி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களம் கண்டது. ஆனால் இந்த கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வி அடைந்தனர். ஏற்கெனவே விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக இருந்து வந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்ததால் மக்கள் நல கூட்டணி என விஜய் விமர்சித்துள்ளார்.
விஜயகாந்த் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவர். அவர் மீது எந்த ஊழல் கறையும் படிந்தது இல்லை. அவரை எந்த ஒரு கட்சி தலைவரும் கடுமையாக விமர்சித்ததில்லை. ஆனால் விஜயகாந்தின் செந்தூரபாண்டி மூலம் திரைத்துறையில் ஒரு இடத்தை பிடித்த விஜய் இன்று விஜயகாந்தின் கட்சி படுதோல்வி அடைய வேண்டும் என நினைக்கலாமா என கேள்வி எழுந்துள்ளது.
-
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி.. தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு! -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ்










Click it and Unblock the Notifications