பிரசாரத்தை திடீர் திடீரென ரத்து செய்யும் விஜய்! புரசைவாக்கம் ரோடு ஷோவும் ரத்தால் தொண்டர்கள் ஏமாற்றம்
சென்னை: விஜய்யின் ரோடு ஷோ இன்றும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தில் ரோடு ஷோ செல்ல இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டு விஜய் வீட்டுக்கு திரும்பியுள்ளார். திடீரென பரப்புரை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நீண்ட நேரமாக காத்திருந்த தவெகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடும் சென்னை தி.நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூரில் விஜய் இன்று ரோடு ஷோ சென்றார். தொடர்ந்து எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கத்தில் விஜய் ரோடு ஷே செல்ல இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டதால் தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். விஜய்யின் ரோடு ஷோவை பார்க்க இருந்த மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஓரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் மே 4 அன்று வெளியிடப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, விஜய் தலைமையிலான தவெக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கும் தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தினமும் விஜய் வாக்கு சேகரிப்பார்.. தினமும் அவரை பார்க்கலாம் என ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.
ஆனால் அதன்பிறகும் சரியாக விஜய்யால் பிரச்சாரத்தை திட்டமிட முடியவில்லை. தினமும் பிரசாரத்திற்கு அனுமதி இல்லை, ரத்து என்று செய்திகள் வெளியாகி வந்தன. எனினும் ஒரு நாள் பிரசாரம் மறுநாள் ஓய்வு என ஒரு நாள் விட்டு விட்டு விஜய் பிரசாரம் செய்து வந்தார். மறுநாளுக்கு பிரசாரத்திற்கு அனுமதி இருந்தாலும் விஜய் தரப்பில் ரத்து என கூறப்படுகிறது. இப்படியாக கடந்த சில நாட்களாகவே தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வுகள் திடீர், திடீரென ரத்து செய்யப்பட்டு வருவது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெறும் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று விஜய் தி நகர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டார். தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடும் சென்னை தி.நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூரில் விஜய் இன்று ரோடு ஷோ சென்றார். தொடர்ந்து எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கத்தில் விஜய் ரோடு ஷே செல்ல இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டதால் தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
விஜய்யின் ரோடு ஷோவை பார்க்க இருந்த மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது. திடீரென பரப்புரை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நீண்ட நேரமாக காத்திருந்த தவெகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
ஜனநாயகன் படம் ஹைதராபாத் ஸ்டுடியோவில் கசிந்ததா.. எடிட்டர் சங்கம் அளித்த விளக்கம் -
ஜனநாயகன் படம் லீக்.. சென்னை ஹைகோர்ட்டில் படக்குழு முறையீடு! நீதிபதி சொன்ன வார்த்தை -
தொகுதி மறுவரையறை நடந்தால்.. தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும்! விஜய் கண்டனம் -
பவன் பாதி.. ஜெகன் மீதி! அரசியலிலும் ரீமேக்கா? வாட் ப்ரோ.. விஜயை வெளுக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு? -
தவெகவில் அடுத்த விக்கெட் கோவை தெற்கு.. ஆப்சென்டான வேட்பாளர்.. சம்பவம் செய்த நாம் தமிழர் -
இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே? -
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய் -
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் ஒரே மாதத்தில் பறி போன இரு உயிர்கள்! விரைவில் வெளியாகும் கள அறிக்கை? -
திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே! -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே












Click it and Unblock the Notifications