விஜயகாந்துக்காக தோப்புக்கரணம் போடறேன், சீக்கிரமா வீட்டுக்கு வரணும் சாமி: உருகிய செங்கல்பட்டு சிறுமி
சென்னை: கேப்டன் விஜயகாந்த், பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரார்த்தனை செய்யப்பட்டு வரும்நிலையில், ஒரு சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில ஆண்டுகளாகவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளது.. இந்நிலையில், கடந்த 18ம் தேதி காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு காரணமாக, சென்னையில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விஜயகாந்த்.

நுரையீரல்: அவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதால் அதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. "விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்" என்று மருத்துவமனை சார்பில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் தரப்படுகிறது என்றும், டிரக்கியாஸ்டமி சிகிச்சை தரப்படுகிறது என்றும் மாறி மாறி தகவல்கள் வருகின்றன.. ஆனாலும் எந்த மாதிரியான சிகிச்சை அவருக்கு தரப்படுகிறது என்பது குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வமாக எதையும் சொல்லவில்லை.
வதந்திகள்: இதனிடையே, விஜயகாந்த் உடல் நிலை குறித்து வதந்திகள் வந்தபடியே இருந்ததால், அவரது மனைவி பிரேமலதா, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
"நான் கேப்டன் கூடவே இருந்து வருகிறேன். மருத்துவமனையில் எந்த பரபரப்பும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் இந்த பரபரப்பும் வதந்தியும் வெளியில்தான் உலாவிக்கொண்டு இருக்கிறது. மனிதநேயத்தோடு வதந்திகளை யார் பரப்பினாலும் தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். கேப்டன் நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் நல்ல செய்தி வரும்" என்று கூறியிருந்தார்.
எனினும், விஜயகாந்த்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு, தேமுதிக ரசிகர்களும் தொண்டர்களும் மட்டுமல்லாமல், தமிழக மக்களே வேதனை அடைந்தனர்.. இதையடுத்து, விஜயகாந்த் உடல்நல பெற வேண்டும் என்று, பல்வேறு கோயில்களில் பிரார்த்தனைகளை செய்து வருகிறார்கள்..
உருக்கம்: இந்நிலையில், ஒரு சிறுமியின் பிரார்த்தனை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் இந்த சிறுமி.. இவர் தன்னுடைய வீட்டில் விநாயகர் முன்பு நின்று, கைகளை கூப்பி, "விஜயகாந்த் கேப்டன், சீக்கிரம் வீட்டிற்கு வர வேண்டும்.. அவர் உடல் நலமுடன் வந்தால் உனக்கு பத்து தோப்புகரணம் போடுகிறேன்" என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கிறார்.
சிறுமி பிரார்த்தனை செய்வதை, அவரது பெற்றோர்கள் வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்களும், கேப்டன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
-
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications