Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயலட்சுமி வர்றாங்க.. "திமுக காரணம்" என கொதித்து கோர்ட்டுக்கு ஓடின சீமான்.. இன்றே வருகிறது தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி இன்று நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமியை இன்று ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Vijayalakshmi Case and High Court orders actress Vijaya lakshmi to appear today for explanation in Seeman Case

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி புகார் தந்திருந்தார்.. வளசரவாக்கம் போலீசில் தரப்பட்டிருந்த இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

விசாரணைகள்: அந்த மனுவில், "கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் தந்திருந்தார்.. அதன் அடிப்படையிலும், அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர். இந்த நிலையில், இப்போது அந்த வழக்கு மறுபடியும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, காவல்துறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011-ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 வருடங்களுக்கு பிறகு, அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிக்கப்படுகிறது. அதனால், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

வழக்குகள்: இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், 2011 மற்றும் 2023-ல் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் போலீசுக்கு உத்தரவிட்டது. மேலும், 2011-ல் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில் அந்த வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பி, அதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் 2 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யபட்டது. இதை படித்து பார்த்த நீதிபதி, "இந்த வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று புகார்தாரர் விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும். அன்றே இந்த வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்படும்" என்று உத்தரவிட்டார்.

இன்று ஆஜர்: இதையடுத்து சீமான் வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி ஆகஸ்ட் 29 (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, வழக்கின் தன்மை குறித்து ஆராய இன்று நடிகை விஜயலட்சுமிக்கு கோர்ட்டுக்கு வருவார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+