வெள்ளிக்கிழமையை அதிர வைத்த விகாஸ் துபே.. விறுவிறு என்கவுன்டர்.. முழு ரவுண்டப்!
சென்னை: வெள்ளிக்கிழமையும் அதுவுமாக காலையிலேயே ரவுடி வேட்டையா என்று மக்கள் டென்ஷனாகி விட்டார்கள் இன்று. உபியை அதிர வைத்த விகாஸ் துபேயை உபி போலீஸார் இன்று வித்தியாசமான முறையில் என்கவுண்டர்செய்து வீழ்த்தியது நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தி விட்டது.
60 கேஸ்கள்.. அதுவும் பச்சைப் படுகொலைகள் உள்ளிட்ட பயங்கர வழக்குகள். ஆனாலும் இத்தனை காலம் ஜாலியாக உலா வந்து கொண்டுதான் இருந்தார். ஆனாலும் அவரை சுட்டுக் கொல்லவோ, பிடித்து உள்ளே போடவோ, கேஸ் நடத்தவோ, வழக்கு தொடுக்கவோ வாய்ப்பு அமையவே இல்லை..

ஆனால் திடீர்னு பாருங்க.. 8 போலீஸாரை சுட்டுக் கொன்றார் துபே.. சட்டென்று மாறியது வானிலை.. மொத்த உ.பி காவல்துறையும் கோபமாகிப் போனது.. துபே வேட்டை தொடங்கியது. உஜ்ஜைனி வரை அது போனது.. கான்பூருக்கு அவரை இழுத்து வந்தது.. கொட்டும் மழைக்கு மத்தியில் திடீரென வேனும் கவிழ்ந்தது.. எஸ்கேப்பும் நடந்தது.. துப்பாக்கிச் சூடும் தொடர்ந்தது.. சிகிச்சை பலனின்றி விகாஸ் துபேவின் உயிரும் பிரிந்தது.
வெள்ளிக்கிழமை காலையில் விடிந்து எல்லோரும் அவரவர் வேலையில் அமர்ந்தபோது கிட்டத்தட்ட விகாஸ் துபே என்ற ரவுடியின் வாழ்க்கை முடிந்து போயிருந்தது.. இதுதொடர்பான இன்றைய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக.. !












Click it and Unblock the Notifications