Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் தமிழ் கட்டாயம்.. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-ல் விதி 15-ன் படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ல் விதி 42(பி)-ன் படியும் வைத்திருக்க வேண்டும்.

Villupuram Collector Orders Tamil Nameplates for All Shops by May 15 Warns of Fines for Non-Compliance

தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 13-ன் படி அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும். இந்த பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின்னர் ஆங்கிலத்திலும், அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகள் என 5:3:2 என்ற விகிதாச்சாரப்படி அமைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளனர். இந்தக் குழுவினர் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மே 15-ம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வரும் மே 15 ஆம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். எனவே, அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழ் பெயர் பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன், அபராதத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தி உள்ளனர். வரும் மே 15 ஆம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+