புலிக்குறிச்சி கிராமத்தில் முதல் எம்பிபிஎஸ் மாணவி பூமாரிக்கு தங்கம் தென்னரசு பாராட்டு!
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் புலிக்குறிச்சி கிராமத்தில் பூமாரி எனும் மாணவி வறுமையையும் பொருட்படுத்தாமல் படித்ததால் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தனியார் மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது. அந்த கிராமத்தில் முதல் மாணவியாக எம்பிபிஎஸ் படிக்க போகும் பூமாரியை நேரில் அழைத்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டினார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகுவின் மகள் பூமாரி. 2023ஆம் ஆண்டு திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த பூமாரி, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற இலக்குடன் இருந்தார்.

பொன்னழகுவின் கணவர் முத்துப்பாண்டி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவர் விறகு வெட்டி தனது மூன்று குழந்தைகளை வளர்த்து வருகிறார். இத்தகைய கடினமான சூழலிலும், பூமாரி சேலத்தில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தாலும், எம்.பி.பி.எஸ் மீதான ஆர்வத்தால் மீண்டும் நீட் பயிற்சி பெற்று இந்த ஆண்டு வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார்.
தற்போது நீட் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க பூமாரிக்கு இடம் கிடைத்துள்ளது. வறுமையிலும் தனது விடாமுயற்சியின் மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து புலிக்குறிச்சி கிராமத்தின் முதல் மருத்துவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணவி பூமாரியின் சிறப்புமிக்க முயற்சியைப் பாராட்டும் வகையில், அவரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
பொருளாதார ரீதியாக பெரும் சவால்களை எதிர்கொண்டபோதும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பூமாரியின் அயராத முயற்சிக்கு உறுதுணையாக இருந்தது பெருமைக்குரிய செயல். நம் ஊரிலிருந்து, குறிப்பாக ஒரு கிராமப்புறத்திலிருந்து ஒரு மருத்துவர் உருவாகியிருப்பது நமக்கு மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என்று மனதார பாராட்டினார்.
அரசு இடஒதுக்கீட்டில் பூமாரிக்கு இடம் கிடைத்தாலும் அவரால் பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே 3 குழந்தைகளை படிக்க வைக்க பொன்னழகு கடன் வாங்கி செலவு செய்திருந்த நிலையில் தற்போது மகளின் மருத்துவ படிப்புக்கு தமிழக அரசோ தன்னார்வலர்களோ உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
அதாவது 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவிக்கு கல்விக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் எல்லாம் இலவசம் என்றாலும் புத்தகம் வாங்கும் செலவு உள்ளிட்டவைகளுக்கு பணம் இல்லாமல் பூமாரி தவித்து வந்தார். இதை செய்தி மூலம் அறிந்த தங்கம் தென்னரசு, அந்த மாணவியை அழைத்து பாராட்டியதுடன் அவருக்கு சிறு நிதியுதவியையும் செய்தார்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications