விஷாலுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு.. எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பணியாளர்களிடம் பிடித்த டிடிஎஸ் பணத்தை அரசுக்கு செலுத்தாத விவாகரம் தொடர் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடிகர் விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எழும்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஷாலுக்கு சொந்தமானது. இந்த நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.திரைப்படங்கள் தயாரிப்பது, திரைப்படங்களை வாங்கி வெளியிடுவது உள்ளிட்டவற்ற பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் டிடிஎஸ் (TDS) தொகை பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தொகையை செலுத்தாததால் விஷால் மீது வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி விஷாலை நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications