சென்னையில் குடிநீர் லாரிகளுக்கான நேரம் மாற்றம்.. கட்டுப்பாடுகள் விதிப்பு.. மக்களே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தண்ணீர் லாரி மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற 10 வயது மாணவி பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் தண்ணீர் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு காலை 6 மணிக்கு மேல் அனுமதியில்லை. ஆனாலும் அவ்வப்போது வாகனங்கள் விதிகளை மீறி இயங்கி வருகின்றன.

கடந்த 18ம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் 10 வயது சிறுமி சவுமியா தனது தாய் யாமினியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலியானார்.
பள்ளி நேரத்தில் தண்ணீர் லாரி நுழைந்ததே இந்த விபத்திற்குக் காரணமென போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கு காரணமான தண்ணீர் லாரியின் டிரைவர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. மேலும் தண்ணீர் லாரிகளுக்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து போக்குவரத்து போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் அருண் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். தண்ணீர் லாரி விஷயத்தில் விதிமுறைகளை போக்குவரத்து போலீசார் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். இதை கடைபிடிக்காத போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே தான் தற்போது சென்னையில் குடிநீர் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான திட்டத்தை சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் காலை 5.30 மணிக்கு பதில் 4.30 மணிக்கே குடிநீர் லாரிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணி முதல் 7.30 வரை திட்டமிட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
அதன்பிறகு காலை 7.30 முதல் 9.30 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9.30 மணிக்கு பிறகு வழக்கமான முறையில் குடிநீர் வினியோக பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ஏற்றார்போல குடிநீர் வினியோக பகுதிகளை மாற்றியமைக்கும் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கி உள்ளது.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications