சென்னையில் குடிநீர் லாரிகளுக்கான நேரம் மாற்றம்.. கட்டுப்பாடுகள் விதிப்பு.. மக்களே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தண்ணீர் லாரி மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற 10 வயது மாணவி பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் தண்ணீர் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு காலை 6 மணிக்கு மேல் அனுமதியில்லை. ஆனாலும் அவ்வப்போது வாகனங்கள் விதிகளை மீறி இயங்கி வருகின்றன.

கடந்த 18ம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் 10 வயது சிறுமி சவுமியா தனது தாய் யாமினியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலியானார்.
பள்ளி நேரத்தில் தண்ணீர் லாரி நுழைந்ததே இந்த விபத்திற்குக் காரணமென போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கு காரணமான தண்ணீர் லாரியின் டிரைவர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. மேலும் தண்ணீர் லாரிகளுக்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து போக்குவரத்து போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் அருண் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். தண்ணீர் லாரி விஷயத்தில் விதிமுறைகளை போக்குவரத்து போலீசார் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். இதை கடைபிடிக்காத போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே தான் தற்போது சென்னையில் குடிநீர் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான திட்டத்தை சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் காலை 5.30 மணிக்கு பதில் 4.30 மணிக்கே குடிநீர் லாரிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணி முதல் 7.30 வரை திட்டமிட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
அதன்பிறகு காலை 7.30 முதல் 9.30 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9.30 மணிக்கு பிறகு வழக்கமான முறையில் குடிநீர் வினியோக பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ஏற்றார்போல குடிநீர் வினியோக பகுதிகளை மாற்றியமைக்கும் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கி உள்ளது.
-
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
தவெக தந்த புகார்.. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பின்னணி -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை












Click it and Unblock the Notifications