கிழியாத சட்டையை கிழித்து போஸ் கொடுக்க மாட்டோம்.. ஸ்டாலினை கலாய்த்த பிரேமலதா!
திமுக மீது தனக்கு இருந்த அத்தனை கோபத்தையும் கொட்டி தீர்த்துவிட்டார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
Recommended Video

சென்னை: திமுக மீது தனக்கு இருந்த அத்தனை கோபத்தையும் கொட்டி தீர்த்துவிட்டார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
திமுக திருட்டு கட்சி என்று குற்றஞ்சாட்டியது தொடங்கி, அதன் தலைவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்பது வரை, பிரேமலதா இன்று பேசியது மொத்தமும் திமுகவிற்கு எதிரான அரசியல். சென்னையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
சந்திப்பில் இவர் மிகவும் கோபமாக பேசினார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை இவர் வைத்தார்.

ஸ்டாலின் நிகழ்வு
2017 பிப்ரவரி மாதம் நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில்தான் திமுக தலைவர் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த புகைப்படம் பெரிய வைரலானது. சட்டையை கிழித்துக் கொண்டு ஸ்டாலின் காரில் இருந்து வெளியேறும் வீடியோவும் வைரலானது.

என்ன பேட்டி
இதைதான் தற்போது கிண்டல் செய்து பிரேமலதா பேட்டியளித்து இருக்கிறார். பிரேமலதா தனது பேட்டியில், மக்களுக்காக ஜெயலலிதாவை சட்டசபையில் எதிர்த்து பேசியது கேப்டன். அவர் அந்த அளவிற்கு தைரியமாக இருந்தார். எந்த அரசியல் தலைவரும் சட்டசபையில் அவ்வளவு தைரியமாக பேசியது கிடையாது.

கேலி
ஆனால் ஸ்டாலின் அப்படிப்பட்டவர் கிடையாது. கிழியாத சட்டையை கிழித்து, வாங்க வாங்க என்று போட்டோ எடுக்கும் கட்சி தேமுதிக இல்லை. அப்படி கேவலமாக நாங்க நடந்துகொள்ள மாட்டோம். நாங்கள் நேர்மையானவர்கள். திமுக தலைவர் கருணாநிதிதான் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தது.

எல்லாம் வேறு
ஆனால் நட்பு என்பது வேறு அரசியல் என்பது வேறு என்று எல்லோருக்கும் தெரியும். திமுக என்றாலே திருட்டு தில்லுமுல்லு கட்சி. விஜயகாந்தை சந்திக்க வந்த போது அரசியல் பேசவில்லை என ஸ்டாலின் வெளிப்படையாக கூறினால், அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன், ஆனால் அவரால் அப்படி கூற முடியாது என்று பிரேமலதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications