சென்னை இந்தி பிரசார சபாவை இழுத்து மூடுக! மே 13-ல் 5 மாநில "நாம் திராவிடர்கள்" ஒன்று கூடி போராட்டம்!
சென்னை: திராவிட மொழிகள் பேசுகிற மாநிலங்களில் இந்தி மொழிக்கான இந்தி பிரசார சபா செயல்படுவதைக் கண்டித்தும் சென்னையில் இயங்கிவரும் இந்தி பிரசார சபாவை இழுத்து மூட வலியுறுத்தியும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த நாம் திராவிடர்கள் அமைப்பு மே 13-ந் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் திராவிடர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்னிந்திய மாநிலங்களில் திராவிடர்களை ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய அமைப்பு நாம் திராவிடர்கள். பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்தி என்ற ஒரே ஒரு மொழியின் வளர்ச்சிக்காக இந்தி பிரசார செயல்படுத்தப்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. சென்னையில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார சபாவை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி மே 13-ந் தேதி சென்னையில் நாம் திராவிடர்கள் அமைப்பின் சார்பாக போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு நாம் திராவிடர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மே13-ந் தேதி போராட்டம் தொடர்பாக நாம் திராவிடர்கள் அமைப்பின் நிறுவனர் கதிர் ஆர்.எஸ்., நமது ஒன் இந்தியா தமிழ் இணையதள செய்தியாளரிடம் கூறியதாவது: இந்தி பிரசார சபா என்பது இந்தி மொழி வளர்ச்சிக்கான ஒரு அமைப்பாக மட்டும் பார்க்கப்படுகிறது. இந்தி மொழி திணிப்புக்கான ஒரு இடமாகவே இந்தி பிரசார சபாவை பார்க்க வேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தி பிரசார சபா என்பது இந்தியர்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டது. நாடு விடுதலைக்குப் பின் குறிப்பாக மொழிவாரி மாநில பிரிவினைக்குப் பின்னும் இந்தி பிரசார சபா செயல்படுவது அர்த்தமற்றது. அதுவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி பிரசார செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தி பேசாத மாநில மக்களின் வரிப்பணத்தில் இந்தி பிரசார சபா நடத்தப்பட்டு வருவது அநீதியானது. ஆகையால்தான் தமிழ்நாட்டின் சென்னையில் இந்தி பிரசார சபா செயல்படக் கூடாது; அதனை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.
இந்தி பிரசார சபா என்பது இந்தி மொழி பேசுகிற மாநிலங்களில் வைத்து கொள்ளப்படலாம். ஆனால் அதேபோல 22 இந்தி மொழிகளையும் பிரசாரம் செய்வதற்கு, வளர்த்தெடுப்பதற்காக நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் 22 மொழி பேசுகிற மாநில இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மத்திய அரசு அப்படி செய்யாமல் இந்தி மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் கட்டாயமாக்குகிறது. இந்தி மொழி பேசாத மாநில அதிகாரிகள், ஊழியர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்படுகிறது. ஆகையால் இந்தி பிரசார சபாவுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.

திராவிடர்கள் என்ற வாதம் தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்படுகிறது; முன்வைக்கப்படுகிறது என திராவிடர் இயக்க எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் திராவிடர் என்கிற மரபின உணர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் திராவிட நாடு கோரிக்கையை கேரளாதான் முன்னெடுத்தது. திராவிடர் உணர்வு அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் இருக்கிறது என்பதைத்தான் நாம் திராவிடர்கள் அமைப்பு தமது செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
மே 13-ந் தேதியன்று இந்தி பிரசார சபாவை இழுத்து மூடுக என்ற முழக்கத்துடன் சென்னை எழும்பூர் ராஜரத்தினரம் விளையாட்டரங்கத்தில் மாலை 4 மணிக்கு நாம் திராவிடர்கள் ஒன்று கூடுகின்றனர். இதில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாட்டு பிரதிநிதிகள் உரையாற்றுகின்றனர். எழுத்தாளர்கள் கோவி.லெனின், டான் அசோக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். Dravida City Movement (Karnataka), We Dravidians(Tamil Nadu) இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இவ்வாறு கதிர் ஆர்.எஸ். கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications