அண்ணாமலை பேசியதால் விட்டுக்கொடுத்தோம்.. இந்த முறை இரட்டை இலை சின்னம் உறுதி.. அடித்துச் சொன்ன ஓபிஎஸ்!
சென்னை: இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயமாக போட்டியிடுவோம், தேர்தல் ஆணையம் எங்களுக்குத்தான் சின்னம் ஒதுக்கும் என உறுதியாகக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதி, என்ன சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், பாஜக கூட்டணியில் தான் போட்டியிடுவோம் என அடித்துக் கூறி வருகிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்ஸுக்கு அதிகாரம்: லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்று தனது ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் வழங்கி, இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், பாஜக உடன் தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என அறிவித்தார்.
பாஜக உடன் தான் கூட்டணி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், "10 ஆண்டு காலம் இந்திய நாட்டின் பிரதமராக இருந்த நரேந்திர மோடி பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். மீண்டும் 3வது முறையாக மோடி தான் பிரதமராக வரவேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. பாஜக கூட்டணியில் தொடர்கிறோம். பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன" என்றார்.
தாமரை சின்னத்தில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதை எல்லாம் பின்னால் பேசுவோம் என மழுப்பலாக பதில் அளித்தார். வரும் மார்ச் 4ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வரும்போது சந்தித்துப் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கும், "பின்னால் பார்ப்போம்" என பதில் அளித்தார் ஓபிஎஸ்.
தாமரை சின்னமா, இரட்டை இலையா?: தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், "ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிக தீர்வாகத்தான் அந்த தேர்தலுக்கு மட்டும் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. நல்ல முடிவு விரைவில் வரும். உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது, திமுகவுக்கு தோல்வியை அளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றோம். ஆனால், கொங்கு பெல்ட்டிலேயே தோல்வியைத் தழுவினோம். எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே முடிவு.
மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடுவோம். உரிய நேரத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும். இரட்டை இலை சின்னத்தில் தான் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications