தமிழர்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி வருவோம்.. வருவேன்.. காஞ்சிபுரத்தில் மோடி கர்ஜனை!
சென்னை: தமிழர்கள் உலகில் எங்கே பிரச்சனைகளை சந்தித்தாலும் நாங்கள் உதவுவோம் என்று பிரதமர் மோடி சென்னையில் பேசி இருக்கிறார்.
சென்னையில் பாஜக சார்பாக பெரிய பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இருக்கிறார்.
இதில் பிரதமர் மோடி தமிழர்கள் குறித்து நீண்ட நேரம் பேசினார்கள். இதில் விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லோரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக பிரச்சனைகள்
பிரதமர் மோடி தனது பேச்சில், தமிழர்கள் எங்கே பிரச்சனைகளை சந்தித்தாலும் நாங்கள் உதவுவோம். தமிழர்களுக்கு முதல் ஆளாக உதவுவது நாமாகத்தான் இருப்போம். உலகில் எங்கு இருந்தாலும் தமிழர்களுக்கு அரசு உதவும். எங்களுக்கு மனிதம்தான் முக்கியம்.

அபிநந்தன் மீட்பு
அபிநந்தனை எப்படி மீட்டோம் என்று எல்லோருக்கும் தெரியும். 2 நாட்களில் அவரை நாங்கள் மீட்டோம். அது எல்லோருக்கும் எப்படி நடந்தது என்று தெரியும். அதை பற்றி நான் பேச போவதில்லை. பல்லாயிரம் மீனவர்களை பாஜக அரசு இலங்கையில் இருந்து மீட்டுள்ளது.

பாதுகாப்பு தலைமையிடம்
இந்தியாவை பாதுகாப்பின் தலைமயிடமாக மாற்ற வேண்டும். பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் இரண்டு இந்தியாவில் நிறுவப்பட உள்ளது. ஒரு பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்கா தமிழகத்தில் நிறுவப்பட உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் கருத்தில் கொள்ளவில்லை. அவர்கள் நம் பாதுகாப்பிற்கு எதிரானவர்கள்.

மாநில அரசு
மாநில ஆசைகளை ஒரு அரசு பூர்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு நாடு முன்னேறும். நாம் மாநில சுயாட்சிக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். மாநில தலைவர்களை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது. காமராஜர் குடும்ப ஆட்சியை எதிர்த்தார். காங்கிரஸ் காமராஜரை அவமானப்படுத்தியது.












Click it and Unblock the Notifications