சென்னையில் 10 தொகுதிகள் உறுதி.. கருத்துக் கணிப்புகளால் நம்பிக்கையில் அதிமுக
சென்னை: சென்னையில் 9 முதல் 10 தொகுதிகள் வரை கட்டாயம் கிடைக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறியிருப்பதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனராம்.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெறும் வரும் தொகுதிகளும் உள்ளது.

ராயபுரம், ஆ.கே.நகர் போன்ற தொகுதிகள் பாரம்பரியமாக அதிமுக வெற்றி பெறும் தொகுதிகள். அதே போல் திமுக வெற்றி பெறும் தொகுதிகள் என கொளத்தூர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகள் உள்ளது. சென்னையில் திமுக வெற்றி பெறும் தொகுதிகள் அதிகம் என்பதால் சென்னை எங்கள் கோட்டை என்று திமுகவினர் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் அதிமுக சென்னையில் 9 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளனவாம். ராயபுரம், ஆர்.கே நகர், அண்ணாநகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, டி. நகர், மைலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயபுரம் தொகுதியின் வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் தொகுதி மக்களுக்கு நன்கு அறிந்தவராகவும், அமைச்சராகவும் தொடர்ந்து இருக்கிறார். இது அவர் வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதி ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி, அதிமுக வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் இந்த தொகுதியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணாநகரை பொறுத்த வரை கோகுல இந்திரா ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ.சி.டி பிரபாகர் தொகுதிக்கு நன்றாக அறிமுகமான நபர். விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் ரவி தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தொகுதிக்கு செய்துள்ள திட்டங்களின் அடிப்படையில் ரவி வெற்றி பெறுவார் என்று தெரிகிறது.
சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சைதை துரைசாமி தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் என்பதோடு கட்சியை தாண்டி சமூக பணிகளை மேற்கொண்டு வருவதால் மக்கள் ஆதரவு அவருக்கு சாதகமாக இருப்பதாக தெரிகிறது. டி.நகர் தொகுதியின் வேட்பாளர் சத்தியநாரயணா தற்போதைய சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார், அவர் செய்த பணிகளின் அடிப்படையில் வாக்குகளை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஆர். நட்ராஜ் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார், நேர்மையானவர் என்பதால் மக்களின் செல்வாக்கு அவருக்கு சாதகமாக உள்ளது. வேளச்சேரி தொகுதி வேட்பாளர் அசோக் ஏற்கனவே போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார், அவரும் தொகுதி மக்கள் அனைவருக்கும் அறிந்த ஒருவாராக இருப்பது சாதகமாக அமைந்துள்ளது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் இழுபறி நிலை நீடிப்பதாகவும், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர், எழும்பூர், துறைமுகம், மற்றும் திருவல்லிக்கேணி தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 9 தொகுதிகளில் வெற்றி பெறுவதன் மூலம் அதிமுக தமிழகத்தின் தலைநகரான சென்னையை கைப்பற்றும் என்றும் அதிமுகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications