Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்மேற்குப் பருவக்காற்றால் இந்த 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை மையம்

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரைக்கும் பலத்த காற்று வீசும், கடல் அலைகள் 3 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள், மதுரை, விருதுநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    China நிறுவனத்தால் கட்டப்பட்ட Airport மோசம்.. Pakistan மக்கள் குமுறல்

    தமிழகத்தில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 3 செமீ மழை பெய்துள்ளது.

    Weather forecast rain Reginol met office Chennai South west monsoon

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள், மதுரை, விருதுநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவக்கூடும்.

    ஆகஸ்டு 20 முதல் 24ம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், ஆந்திரா, ஒடிசா, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 20.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும், என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+