கோடை காலம் ஓவர்! இன்று தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்! எங்கெல்லாம் மழை இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்துள்ள நிலையில், இன்று வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் முந்தைய ஆண்டுகளைப் போல கடும் வெயில் இல்லை. அசானி புயல் மற்றும் கோடை மழை காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.
இப்போது தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் காலத்தில் மழை பரவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை
அதன்படி இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல அடுத்த 3 நாட்களிலும் வானிலை இதேபோலத் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

நேற்று
நேற்றைய தினம் தஞ்சை வல்லம், அதிராம்பட்டினம் பகுதிகளில் கணிசமாக மழை பெய்துள்ளது. வெப்பத்தை பொறுத்த வரை மதுரை நகர் பகுதியில் 101.48 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல சென்னையில் 37.3 திருச்சியில் 97.7 பாரன்ஹீட் வெப்பமும், கடலூரில் 98.6 பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.

மீனவர்கள்
வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications