"என்னால் முடியல! சீமானை எதுவும் செய்ய முடியாது!" நள்ளிரவில் புகாரை வாபஸ் பெற்ற பின் விஜயலட்சுமி பரபர
சென்னை: சீமான் மீதான புகாரை நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துவிட்டு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்து அவர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்குச் சீமானை நேரில் ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பிய போதிலும் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே நேற்றிரவு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி சீமான் மீதான அனைத்து புகார்களையும் வாபஸ் பெற்றார்.
விஜயலட்சுமி: அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "போலீசாரின் உரியப் பாதுகாப்புடன் தான் இருந்தேன். வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தான் தங்கி இருந்தேன். இருப்பினும், கடந்த சில நாட்களாக வீரலட்சுமி ஒரு ரூட்டில் செல்கிறார். என்னையும் வேறு ஒரு ரூட்டில் தள்ளப் பார்க்கிறார். எதுவாக இருந்தாலும் என்னைக் கேட்டுவிட்டுப் பேசும்படி கூறியிருந்தேன். நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து நேற்றிரவே என்னை வெளியே செல்லும்படி சொன்னார்கள்.
இரவு நேரம் என்பதால் போலீஸ் தான் அங்கே பேசி தங்க வைத்தனர். அங்கே எனக்குக் காலையில் உணவு கூட கிடைக்கவில்லை. போலீஸ் தான் வாங்கிக் கொடுத்தார்கள். இப்படி வெளியே சொல்ல முடியாத துன்புறுத்தல்களை நான் எதிர்கொண்டேன். இதன் காரணமாகவே நான் புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்தேன். நான் இப்போது பெங்களூர் கிளம்புகிறேன். யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. சீமானிடமும் கூட இது குறித்துப் பேசினேன்.

கொச்சைப்படுத்தினார்கள்: புகார் அளித்த என்னையே கொச்சைப்படுத்தினார்கள். இது எனக்கே டார்ச்சாக இருந்தது. இதை மேலும் தொடர எந்தவொரு எண்ணமும் இல்லை. போலீஸ் நடவடிக்கை சற்று மெதுவாக இருந்தது. எனக்கு 20 சம்மன் அனுப்பினாலும் எதுவும் செய்ய முடியாது எனச் சீமான் கூறிய பிறகும், சம்மன் அனுப்பி வந்தனர்.
இதில் பல கொடுமைகளை எதிர்கொண்டேன். வீரலட்சுமி சொன்னதும் என்னை அதிகம் கொடுமைப்படுத்தினார்கள். சீமான் பேசுவதும் எனக்கு நிறையக் கஷ்டமாக இருக்கிறது. என்னால் இவ்வளவு தான் முடிந்தது. இந்த விவகாரத்தில் என்னால் இனியும் முடியாது.. இன்றைக்குச் சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் போனது. இரண்டு வாரம் வீட்டுச் சிறை போலவே இருந்தேன்.. மொபைல் கூட இல்லாமல் தான் இருந்தேன். வரும் காலத்தில் இதைத் தொடர விரும்பவில்லை.

சீமானுக்கு அதிக பவர்: நாங்கள் இந்த விவகாரத்தில் முழு முயற்சி எடுத்தோம். இருப்பினும், உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. விசாரணை நடந்த விதத்தில் திருப்தி இல்லை. தமிழ்நாட்டில் சீமானுக்கு அதிக பவர் இருக்கிறது போல.. அவரை தாண்டி எதுவும் செய்ய முடியாது போல.. நான் எனது தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். இப்போது சீமான் தான் இங்கே பவர்புல்லாக இருக்கிறார் போல..
எதிரி என்றால் தான் மனவேதனையாக இருந்திருக்கும். நான் வாழ்ந்த நபர் தானே.. பல விஷயங்கள் சொன்னார். இதற்கு மேல் என்னால் சண்டை போட முடியாது. சீமான் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அவர் வெற்றிகரமாக இருக்கட்டும். இதுவே போதும்.
எதுவும் செய்ய முடியாது: சீமானுடன் நான் பேசினேன்.. எல்லாம் விஜயலட்சுமியை வைத்துப் பயன்படுத்தவே பார்க்கிறார்கள். யாரும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை.. நான் மட்டும் தனியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அவரை இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது போல.. நான் இதை மேலும் மோசமாக்காமல் விலகிக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் நான் பணம் எதையும் வாங்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நாங்கள் இந்த விவகாரத்தைப் பேசி சரி செய்து கொண்டோம். எனக்கு போதிய ஒத்துழைப்பு இல்லாததே காரணம். சமூக வலைத்தளங்களில் என்னை ரொம்பவே அசிங்கப்படுத்தினார்கள். இதனால் போதும் என்ற முடிவுக்கு வந்து கொண்டேன். சாதாரண நபருக்கு எதிரான வழக்கு என்றால் நடவடிக்கை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கு எதிராக என்பதால் எதையும் செய்ய முடியவில்லை.
திமுகவால் சீமானை கைது செய்ய முடியாது: மீண்டும் இந்த விவகாரத்தைத் தொடர வேண்டாம் என்பதாலேயே பேசி சமரசமாக முடித்துக் கொண்டோம். இங்கே நியாயம் யார் பக்கம் இருந்தது என்பதில் விஷயம் இருக்கவில்லை. யாரிடம் பவர் இருந்தது என்பதே இதை முடிவு செய்தது. திமுக அரசால் சீமானை கைது செய்ய முடியுமா என எனக்குத் தெரியவில்லை. அவரை விசாரணைக்குக் கூடக் கொண்டு வர முடியில்லை. இதனால் இனியும் போராடுவதில் அர்த்தம் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications