சத்தமின்றி சென்னையை சூழும் ஆபத்து! "மூச்சு விடவே முடியல.." மக்களுக்கு ரொம்பவே டேஞ்சர்! என்ன பிரச்சனை
சென்னை: தலைநகர் சென்னையில் காற்றின் தரம் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையைக் காட்டிலும் மோசமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன்பீஸ் இந்தியா என்ற அமைப்பு நாடு முழுக்க இருக்கும் முக்கிய நகரங்களின் காற்றின் தரம் மற்றும் மாசு குறித்த ஆய்வை செய்து ஸ்பெர் தி ஏர் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல் காட்டிலும் சென்னையில் காற்றில் மாசுபடுத்தும் துகள்கள் அதிகமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்பான அளவை காட்டிலும் மாசுபடுத்தும் துகள்கள் பல மடங்கு அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காற்றில் இருக்கும் துகள்கள்: பொதுவாகக் காற்றில் உள்ள துகள்கள் அவற்றின் சைஸ் பொறுத்து அவை வரையறுக்கப்படுகிறது. அதன்படி 10 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் (PM10) கொண்ட துகள்கள் நுரையீரல் உள்ளே செல்லும். இது மோசமான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் (PM2.5) கொண்ட துகள்கள் நுண்ணிய துகள்கள் என வரையறுக்கப்படுகிறது.
சென்னையில் கடந்த கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் நகரில் சராசரி PM10 அளவு என்பது 45.9 μg/m³ ஆக இருக்கிறது. இது பாதுகாப்பான அளவை (15 μg/m³) காட்டிலும் 3.1 மடங்கு அதிகமாகும். அதேபோல சென்னையில் சராசரி நைட்ரஜன் டை ஆக்சைடு அளவும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை காட்டிலும் 1.5 மடங்கு அதிகமாக இருக்கிறது. இதைக் குறைக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி நடவடிக்கை: இந்த ஆய்வு ஒரு பக்கம் இருக்க நகரின் மாசுபட்ட பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்தச் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மின்சார போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவது, சாலை துப்புரவு பணிகளை இயந்திரமயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது
சென்னை மாநகராட்சி மண்டலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "மணலி, அம்பத்தூர், திருவொற்றியூர் போன்ற மண்டலங்களில் மாசு அதிகமாக இருக்கிறது. காற்றின் தரத்தை மேம்படுத்த நீரூற்றுகள் அமைத்தல், சாலை ஓரத்தில் மரங்களை நட்டுப் பராமரிப்பது போன்ற பல திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களில், சென்னை மாநகராட்சி பல இடங்களில் செயற்கை நீரூற்றுகளை உருவாக்கியுள்ளது. அந்த பகுதிகளில் அவை காற்றின் தரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளன. இதனால் வாகனங்கள் அதிகம் இருக்கும் சாலை சந்திப்புகளில் அதிகளவில் நீரூற்றுகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
ஆகாய நடைமேடை: மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் ஆகாய நடைமேடை அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். தி நகரில் சமீபத்தில் ஆகாய நடைமேடை அமைக்கப்பட்ட நிலையில், அது அப்பகுதியில் வாகன நெரிசலைக் கணிசமாகக் குறைத்து காற்று மாசையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,
சென்னையில் காற்றில் இருக்கும் துகள்களின் எண்ணிக்கை உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையைக் காட்டிலும் அதிகம் என்றாலும் பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, லக்னோ ஆகிய நகரங்களை ஒப்பிடும் போது சென்னையில் காற்று மாசு குறைவாகவே இருந்துள்ளது. காற்றில் PM2.5 அதிகம் இருந்தால் அது ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications