Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் போண்டா மணிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.. நாளை முதல் டயாலிசிஸ்.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் கட்டமாக நாளை முதல், அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில், சிறுநீரகம் செயலிழப்பால் நகைச்சுவை நடிகர் போண்டா மணி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து, மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

டயாலிசிஸ் சிகிச்சை

டயாலிசிஸ் சிகிச்சை

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை முறை தொடங்க இருக்கிறது. அவரது உறவினர்கள் மூலமாகவோ, அல்லது உறுப்பு தான ஆணையத்தின் மூலமாகவோ சிறுநீரகம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகள் அனைத்தும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவ பல்கலைக்கழகம்

சித்த மருத்துவ பல்கலைக்கழகம்

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கக் கோரி சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப் பட்டுள்ளது. அதில், தமிழக ஆளுநர் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவில் மாணவர் சேர்க்கை தொடர்பான விளக்கம் கோரி கடிதம் எழுதினார்கள். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து விரிவான பதில் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட மசோதாவின் பிரிவுகளுக்கு முரண்பாடு இல்லை என விரிவான விளக்கத்தோடு பதில் அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் விரைந்து அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

உறுப்பு தானம் - தமிழகம் முதலிடம்

உறுப்பு தானம் - தமிழகம் முதலிடம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொடர்ந்து உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. எலும்பு, தோல், கண், இருதயம் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு மாதவரத்தில் 25 ஏக்கர் இடம் பார்த்துள்ளோம். பல்கலைக்கழக அலுவலகம் திறக்கப்பட்ட உடன் அடுத்தக்கட்டப் பணிகள் நடைபெறும்.

காய்ச்சல் முகாம்கள்

காய்ச்சல் முகாம்கள்

ஒரே தெருவில் 3-க்கும் அதிகமான மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வடகிழக்கு பருவமழை முழுவதுமாக முடியும் வரை தமிழகத்தில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+