சென்னை மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! சட்டுனு காரை விட்டு இறங்கி மேயர் பிரியா சொன்ன சூப்பர் பதில்
சென்னை: மீஞ்சூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சென்னை மேயர் பிரியா, சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நாப்பாளையம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மேயர் பிரியா வந்திருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேயர் பிரியா அங்கிருந்து புறப்படத் தயாரானார்.

அவரது கார் கிளம்பிவிட்ட நிலையில், அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்க.. உடனடியாக காரில் இருந்து இறங்கிய மேயர் பிரியா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
மேயர் பிரியா: மீஞ்சூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சென்னை மேயர் பிரியா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மேயர் பிரியா காரில் இருந்து கிளம்பத் தயாரானார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் மழை குறித்தும் வெள்ளத்தைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை முன்வைத்தனர். அப்போது உடனடியாக காரில் இருந்து இறங்கிய சென்னை மேயர் பிரியா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் ஏற்கனவே நிறைய முறை இந்தப் பகுதியில் ஆய்வுக்கு வந்துள்ளேன். இந்தப் பகுதியில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். இந்தப் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
ஹேப்பி நியூஸ்: இது மட்டுமின்றி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் வெள்ள தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ள தடுப்பு பணிகளைக் கண்காணிக்க ஒவ்வொரு பகுதியிலும் கூடுதலாக 10 பேரை நியமித்துள்ளோம். வெள்ள தடுப்பு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக வெளியேற்றக் கூடுதலாக மோட்டர்களை தயார் நிலையில் வைக்கச் சொல்லியுள்ளோம்.
மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை ஒரு அளவுக்கு மட்டுமே நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஒரு மணி நேரத்தில் 10 செமீ மீழை பெய்தால் மழை சில இடங்களில் தேங்கலாம். அப்படித் தேங்கினாலும் மழை நின்று ஒரு மணி நேரத்தில் மழை நீரை அப்புறப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை: விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வழக்கமாக அக். முதல் டிசம்பர் மாதம் வரை இந்த வடகிழக்கு பருவமழை இருக்கும். தலைநகர் சென்னையில் பொதுவாக இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பெய்யும். கடந்த காலங்களில் பல முறை வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மழை சீசன் என்றாலே அச்சப்படும் அளவுக்கே நிலைமை இருந்தது.
இப்போது சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் இந்த மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகவும் சில இடங்களில் மட்டும் பணிகள் பாக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தான் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா ராஜன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications