"சரிடா கண்ணு.. கடைசியாக இந்த வண்டியில் போறே" அற்புதம்மாள் சொல்லவும், திரும்பி பார்த்த பேரறிவாளன்
பரோலை ரத்து செய்ய பேரறிவாளன் புழல் சிறைக்கு சென்றுள்ளார்
சென்னை: பரோலை ரத்து செய்வதற்காக, பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்தார்..
அவருடைய தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தபடியே இருந்தார். எனவே, கடந்த மே மாதம் 28முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியிருந்தார்..

அற்புதம்மாள்
ஆனால், பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் கேட்டுக் கொண்டிருந்ததையடுத்து, தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்... பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு கிளம்பியது என்றாலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

வரவேற்பு
இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்தனர். அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் இதை பற்றி பேசும்போது, "சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... என் மகனின் உடல்நிலை சீராக உள்ளதற்கு முக்கிய காரணம் 9 மாத காலமாக பரோலை நீட்டித்ததுதான்.. இப்போது சுதந்திரமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வதாக பேரறிவாளன் சொல்லி இருக்கிறார்..

திருமணம்
அதனால் முதல் ஏற்பாடாக பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது... அதுமட்டுமல்லாமல் எனது மகன் விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டவர். இப்போதைக்கு அதற்கான பொருளாதார வசதி இல்லை. வருங்காலத்தில் கண்டிப்பாக விவசாயத்தில் பேரறிவாளன் ஈடுபடுவார். 30 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு என் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு மற்றும் முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

பாதுகாப்பு
இந்நிலையில், பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், பரோலை ரத்து செய்ய புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.. வேலூர் டிஎஸ்பி மணிமாறன் தலைமையில், வாணியம்பாடி டிராபிக் ஆர்ஐ செல்லபாண்டியன், ஆர்எஸ்ஐ முரளிதரன் ஆகியோருடன் 2 வாகனங்களில் சுமார் 14க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு பேரறிவாளனை அழைத்து சென்றனர்.

ஜீப்
ஜீப்பில் ஏறும்போது, அவருடைய தாயார் சரிடா கண்ணு இந்த வண்டியில் கடைசியாக போகிறாய்... பத்திரமாக வா கண்ணு என்று சொல்லி உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்... பேரறிவாளனும் அம்மாவை பார்த்து நெகிழ்வுடன் தலையசைத்தார்.. புழல் சிறைக்கு சென்று பரோலை ரத்து செய்த பிறகு, பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வருவார் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications