Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சரிடா கண்ணு.. கடைசியாக இந்த வண்டியில் போறே" அற்புதம்மாள் சொல்லவும், திரும்பி பார்த்த பேரறிவாளன்

பரோலை ரத்து செய்ய பேரறிவாளன் புழல் சிறைக்கு சென்றுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரோலை ரத்து செய்வதற்காக, பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்தார்..

அவருடைய தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தபடியே இருந்தார். எனவே, கடந்த மே மாதம் 28முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியிருந்தார்..

 அற்புதம்மாள்

அற்புதம்மாள்

ஆனால், பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் கேட்டுக் கொண்டிருந்ததையடுத்து, தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்... பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு கிளம்பியது என்றாலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

வரவேற்பு

வரவேற்பு

இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்தனர். அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் இதை பற்றி பேசும்போது, "சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... என் மகனின் உடல்நிலை சீராக உள்ளதற்கு முக்கிய காரணம் 9 மாத காலமாக பரோலை நீட்டித்ததுதான்.. இப்போது சுதந்திரமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வதாக பேரறிவாளன் சொல்லி இருக்கிறார்..

 திருமணம்

திருமணம்

அதனால் முதல் ஏற்பாடாக பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது... அதுமட்டுமல்லாமல் எனது மகன் விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டவர். இப்போதைக்கு அதற்கான பொருளாதார வசதி இல்லை. வருங்காலத்தில் கண்டிப்பாக விவசாயத்தில் பேரறிவாளன் ஈடுபடுவார். 30 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு என் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு மற்றும் முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்நிலையில், பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், பரோலை ரத்து செய்ய புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.. வேலூர் டிஎஸ்பி மணிமாறன் தலைமையில், வாணியம்பாடி டிராபிக் ஆர்ஐ செல்லபாண்டியன், ஆர்எஸ்ஐ முரளிதரன் ஆகியோருடன் 2 வாகனங்களில் சுமார் 14க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு பேரறிவாளனை அழைத்து சென்றனர்.

ஜீப்

ஜீப்

ஜீப்பில் ஏறும்போது, அவருடைய தாயார் சரிடா கண்ணு இந்த வண்டியில் கடைசியாக போகிறாய்... பத்திரமாக வா கண்ணு என்று சொல்லி உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்... பேரறிவாளனும் அம்மாவை பார்த்து நெகிழ்வுடன் தலையசைத்தார்.. புழல் சிறைக்கு சென்று பரோலை ரத்து செய்த பிறகு, பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வருவார் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+