"சரிடா கண்ணு.. கடைசியாக இந்த வண்டியில் போறே" அற்புதம்மாள் சொல்லவும், திரும்பி பார்த்த பேரறிவாளன்
பரோலை ரத்து செய்ய பேரறிவாளன் புழல் சிறைக்கு சென்றுள்ளார்
சென்னை: பரோலை ரத்து செய்வதற்காக, பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்தார்..
அவருடைய தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தபடியே இருந்தார். எனவே, கடந்த மே மாதம் 28முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியிருந்தார்..

அற்புதம்மாள்
ஆனால், பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் கேட்டுக் கொண்டிருந்ததையடுத்து, தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்... பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு கிளம்பியது என்றாலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

வரவேற்பு
இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்தனர். அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் இதை பற்றி பேசும்போது, "சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... என் மகனின் உடல்நிலை சீராக உள்ளதற்கு முக்கிய காரணம் 9 மாத காலமாக பரோலை நீட்டித்ததுதான்.. இப்போது சுதந்திரமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வதாக பேரறிவாளன் சொல்லி இருக்கிறார்..

திருமணம்
அதனால் முதல் ஏற்பாடாக பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது... அதுமட்டுமல்லாமல் எனது மகன் விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டவர். இப்போதைக்கு அதற்கான பொருளாதார வசதி இல்லை. வருங்காலத்தில் கண்டிப்பாக விவசாயத்தில் பேரறிவாளன் ஈடுபடுவார். 30 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு என் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு மற்றும் முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

பாதுகாப்பு
இந்நிலையில், பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், பரோலை ரத்து செய்ய புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.. வேலூர் டிஎஸ்பி மணிமாறன் தலைமையில், வாணியம்பாடி டிராபிக் ஆர்ஐ செல்லபாண்டியன், ஆர்எஸ்ஐ முரளிதரன் ஆகியோருடன் 2 வாகனங்களில் சுமார் 14க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு பேரறிவாளனை அழைத்து சென்றனர்.

ஜீப்
ஜீப்பில் ஏறும்போது, அவருடைய தாயார் சரிடா கண்ணு இந்த வண்டியில் கடைசியாக போகிறாய்... பத்திரமாக வா கண்ணு என்று சொல்லி உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்... பேரறிவாளனும் அம்மாவை பார்த்து நெகிழ்வுடன் தலையசைத்தார்.. புழல் சிறைக்கு சென்று பரோலை ரத்து செய்த பிறகு, பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வருவார் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications