வாயை திறந்தாலே வன்மம்.. பிரியாணி மேனை கைது செய்யும் போது நடந்தது என்ன? வெளியான தகவல்
சென்னை: பிரியாணி மேன் என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரை கைது செய்யும் போது நடந்த சம்பவங்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்கொலையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டது, பெண்களை கடுமையாக பேசியது போன்ற புகார்கள் அவர் மீது வைக்கப்படுகின்றன. அதோடு அரசின் சமூக நீதி திட்டங்களை அசிங்கமாக பேசிய பிரியாணி மேனை கைது செய்ய வேண்டும் என்று திமுகவினர் சிலர் கூற.. தற்போது பிரியாணி மேனுக்கு சில அதிமுகவினர் சப்போர்ட் செய்கின்றனர்.

இந்த நிலையில் இவருக்கு எதிராக திமுக ஐடி விங்கின் அதிகாரபூர்வ புகார் தளமான ஐடி விங் ரிப்போர்ட் பக்கம் விமர்சனம் வைத்துள்ளது. அவர் மீது புகார் தர வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் அடுத்து அவர் கைதாக வாய்ப்பு உள்ளதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கைதின் போது முரண்டு; இவர் கைது செய்யப்படும் போது முதலில் வர மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. பின்னர் முறையான புகார் விவரங்களை தெரிவித்த பின்பே அவர் கைதாகி செல்ல ஒப்புக்கொண்டுள்ளார்.
பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். யூ டியூப் வீடியோ ஒன்றில் பெண் ஒருவர் பற்றி அவர் கேவலமாக பேசியதே கைதுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன மோதல்: கடந்த 1 வாரமாக இணையத்தில் பெரிய பிரச்சனையாக மாறி இருப்பது பிரியாணி மேன் - இர்பான் - டெய்லர் அக்கா சண்டைதான். இணையத்தையே இந்த சண்டைதான் உலுக்கி உள்ளது. பிரியாணி மேன் என்பவரின் உண்மையான பெயர் அபிஷேக் ரபி.
இவர் பிரியாணி மேன் என்ற சேனலை நடத்தி வருகிறார். abusive என்ற சொல்லுக்கு அர்த்தம் இருக்கும் என்றால் அது பிரியாணி மேன்தான். வாயை திறந்தாலே வன்மம்.. கோபம்.. அசிங்கம்தான் இவரின் ஸ்டைல். இதை சிலர் dank, dark என்றெல்லாம் சொல்வது உண்டு. ஆனால் உண்மையில்.. dank, dark வீடியோக்களை சர்வதேச அளவில் பார்த்தவர்களுக்கு இவர் பேசுவது dank, dark இல்லை.. abusive என்று எளிதாக தெரிந்து இருக்கும்.
பெண்களை விடாமல் திட்டுவது, பெண்கள் வீட்டு வேலை பார்க்க வேண்டும், திருமணம் செய்வதே வேலை பார்க்கத்தான், செம்மொழி பூங்கா என்பது பாலியல் தொழில் செய்யும் இடம் என்று தொடங்கி இவர் பேசுவது எல்லாம் அசிங்கம், வன்மத்தின் உச்சம்தான்.
இப்படிப்பட்ட பிரியாணி மேன் மீது ஏற்கனவே ஒரு பீடோ புகார் உள்ளது. அதாவது சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து டெலிகிராம் குழுவின் அட்மின் ஒருவருடன் இவர் நட்பாக இருந்ததும்.. அதன்பின் விஷயம் பெரிதான போது இதில் இருந்து பிரியாணி மேன் எஸ்கேப் ஆனதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் அதில் நேரடியாக பிரியாணி மேன் மீது புகார் வைக்க பெரிதாக ஆதாரங்கள் கொடுக்கப்படவில்லை.
மோதல்: இப்படிப்பட்ட பிரியாணி மேன்தான் சமீபத்தில் இர்பான் மீதும், டெய்லர் அக்கா மீதும் கடுமையான புகார்களை வைத்தார். இர்பான் என்பவர் உணவு ரிவ்யூ செய்யும் நபர். டெய்லர் அக்கா என்பவர் தயாளு டிசைன்ஸ் என்ற நிறுவனத்தை வைத்துள்ளார். இது டெய்லரிங் நிறுவனம். இன்ஸ்டாகிராமில் இவர் டெய்லரிங் கற்று கொடுக்கிறார். இதற்காக தனி பக்கம் வைத்துள்ளார். சமீபத்தில் டெய்லர் அக்கா என்று இவர் டிரெண்டிங் ஆனார்.. இதற்கு அவரின் வீடியோக்கள்தான் காரணம்.
இர்பான, டெய்லர் அக்கா அளவிற்கு பிரியாணி மேன் பிரபலம் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பிரியாணி மேன் கடந்த சில நாட்களில் இரண்டு பேரையும் தாக்கி வீடியோ போட்டு இருந்தார். இனி நடந்ததை பாயிண்ட் பை பாயிண்ட் புரியும்படி பார்க்கலாம். பிரியாணி மேன்.. இர்பானை பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் இர்பான் மச்சான் ஏற்படுத்திய கார் விபத்து பற்றி விமர்சனங்களை வைத்தார். அது இர்பான் செய்தது என்றும், விபத்து ஏற்படுத்திவிட்டு இர்பான் நிற்கவில்லை என்றெல்லாம் கூறினார். அதோடு இர்பான் தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தை பற்றியும் விமர்சனங்களை வைத்தார்.
இதற்கெல்லாம் இர்பான் ஆதாரங்களுடன் பதிலும் கொடுத்தார். மச்சான் ஓட்டியதற்கான ஆதாரம், விபத்து ஏற்படுத்திய பின் அங்கேயே நின்றதற்கான ஆதாரம், போலீசிடம் பேசியது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி எல்லாம் இர்பான் பதிலடியை கொடுத்தார். அதோடு புகார்களுக்கு எல்லாம் ஆதாரங்களுடன் இர்பான் பதிலடி கொடுத்தார். இதற்கு டெய்லர் அக்கா ப்ளவுஸ் வீடியோ என்று ஆபாசமாக வீடியோ போடுவதாக புகார் வைத்தார் பிரியாணி மேன். அதோடு நிற்காமல்.. டெய்லர் அக்காவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பெண் என்பதற்காகவே கடுமையாக பேசினார். அதோடு இல்லாமல்.. அவர் மோசடி செய்வதாகவும் புகார்களை வைத்தார், என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications