பொதுக்குழுவை எப்படி ஒருங்கிணைப்பது... திமுக மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் பேசியது என்ன..?
சென்னை: திமுகவின் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள உள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
அந்தக் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் எப்படி ஒருங்கிணைப்பது என்பது பற்றி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் 13 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் முடுக்கிவிடுமாறு மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
பரபரப்பான அரசியல் நகர்வுகள் திமுகவில் நடைபெற்று வரும் சூழலில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். காணொலிக் காட்சி மூலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முழுக்க முழுக்க பொதுக்குழு கூட்டம் ஒருங்கிணைப்பு பற்றியே பேசப்பட்டிருக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த
திமுகவின் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளதால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. இதுவரை திமுகவில் 3 பொதுச்செயலாளர்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் அலங்கரித்த பதவியை துரைமுருகன் அலங்கரிக்கவுள்ளார். இதனால் இந்தப் பொதுக்குழுவை பொறுத்தவரை திமுகவினருக்கு ஸ்பெஷல் பொதுக்குழு.

ஒருங்கிணைப்பு
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் எல்லோரிடமும் பொதுக்குழுவை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கினார். மாவட்ட திமுக அலுவலகம் அல்லது பெரிய திருமண மண்டபத்தில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து அவர்களிடம் மினிட் நோட்களில் கையெழுத்து பெற வேண்டும் என்றும் அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு பேட்ஜ் எப்படி முக்கியமோ அதைப்போல் மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைத்து நடத்தப்படும் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களும் பேட்ஜ் அணிவது கட்டாயம் என கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

உரிய நேரத்தில்
அதேபோல் பொதுக்குழு உறுப்பினர்களை தவிர மாவட்டச் செயலாளர்கள் வேறு யாருக்கும் அரங்கிற்குள் அனுமதி தரக்கூடாது என்றும் உரிய நேரத்தில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதேபோல் செல்போன் உள்ளிட்டவைகளுக்கும் அனுமதி மறுக்குமாறு அவர் கூறியிருக்கிறார். இதனிடையே தேர்தல் பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் முழு கவனத்தை செலுத்துங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
-
திமுக கொடுத்த ஷாக்.. பனையூரில் வெடித்த பட்டாசு! 'இந்தியா' கூட்டணியைக் குறிவைக்கும் விஜய் - டார்கெட் 2029! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா











Click it and Unblock the Notifications