சென்னை பிரபல ஓட்டலில்.. நள்ளிரவில் காதலனுடன் செல்போனில் வாக்குவாதம்.. ஆடிப்போக வைத்த பெண் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான மாணவி ஒருவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அந்த மாணவி, நேற்று முன்தினம் இரவு விடுதியில் இருந்து வெளியேறி திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இரவு 2.30 மணியளவில் ஓட்டலின் 4-வது மாடியில் காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் மாணவி எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.

காதலன் காதலிக்கு இடையே ஏற்படும் சண்டை, கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டை ஆகிய இந்த இரண்டிற்குமே விட்டுக்கொடுத்து செல்ல முடியாத நிலை தான் காரணமாக இருக்கிறது. ஒருவருக்காக இன்னொருவர் எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுத்து செல்ல மறுக்கும் போது சிக்கல் ஏற்படுகிறது. ஈகோ அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறது. இறுதியில் உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதேநேரம் சில நேரங்களில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவு, இருவருக்குமே வாழ்நாள் முழுக்க தூக்கத்தை தொலைய வைக்கிறது. சென்னையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

hotel anna saalai

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது மாணவி எம்.பி.ஏ. படித்து வருகிறார். அதே கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் அவர் தங்கியிருந்தார். அந்த மாணவி, கடந்த 7ம் தேதி அன்று இரவு விடுதியில் இருந்து வெளியேறி திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். இரவு 2.30 மணியளவில் ஓட்டலின் 4-வது மாடிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து திடீரென கீழே குதித்து விட்டார்.

இதில் கல்லூரி மாணவிக்கு அவரது தலை மற்றும் இடுப்பு எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும், மாடியில் இருந்து குதித்தபோது கேபிள் வயர்களில் சிக்கிக்கொண்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார், படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு அருகில் இருந்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசாரிடம் மாணவி கூறுகையில், "என்னுடைய கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் ஒருவரை காதலித்து வந்தேன். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அவர், தற்போது பெங்களூருவில் வேலை செய்கிறார். இரவு 2.30 மணியளவில் செல்போனில் இருவரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் 4-வது மாடியில் இருந்து குதித்துவிட்டேன்" என்றார்.

இதற்கிடையே மருத்துவமனையில் அந்த மாணவி சுயநினைவை இழந்தார். இதனால் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக அவர், ஆன்லைனில் கத்தி ஒன்றை ஆர்டர் செய்து, அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு வரவழைத்துள்ளார். கத்தியை வாங்கியது ஏன் என்றும் விசாரித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+