திண்டுக்கல் பஸ்ஸில் ஒரு நொடி தவறு.. முடிந்து போன அமராவதி வாழ்க்கை.. தயவு செய்து இப்படி பண்ணாதீங்க
திண்டுக்கல்: அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏறும் பலர் உட்கார இடம் கிடைக்காமல் போனால் நின்று கொண்டே வருகிறார்கள். அப்படி பேருந்தில் ஏறும் போது, டிக்கெட் எடுப்பதற்காக பணத்தை எடுக்கிறார்கள். அவர்கள் பணத்தை எடுக்கும் போது கம்பியை பிடிக்காமல் நிற்கிறார்கள். அந்த நேரத்தில் திடீரென டிரைவர் பிரேக் அடித்து வண்டியை ஓட்டினால் சட்டென வண்டியில் இருந்து பயணிகள் தவறிவிழுந்து விடுகிறார்கள். அப்படித்தான் திண்டுக்கல் தனியார் பேருந்தில் நடந்துள்ளது.
இன்றைக்கு பல்வேறு ஊர்களில் பேருந்துகளில் ஏறும் மக்கள், கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால், நின்று கொண்டே பயணிக்கிறார்கள். அப்படி பேருந்துகளில் உட்கார இடம் இல்லாத காரணத்தால், நின்று கொண்டே செல்லும் பயணிகள் திடீரென தவறி விழும் சம்பவங்கள் நடக்கின்றன. ஏனெனில் பேருந்தில் ஏறும் போது, டிக்கெட் எடுப்பதற்காக பணத்தை எடுக்கிறார்கள். அவர்கள் பணத்தை எடுக்கும் போது கம்பியை பிடிக்காமல் நிற்கிறார்கள்.

அந்த நேரத்தில் திடீரென டிரைவர் பிரேக் அடிக்கும் போது, தவறி விழுகிறார்கள். சில பெண்கள் கம்பி எட்டாத காரணத்தால் சைடில் உள்ள கம்பி பிடித்து நிற்கிறார்கள். சைடு கம்பியை பிடித்து நிற்கும் போது சிலர், சாய்ந்து நின்று கொண்டு நிற்கிறார்கள். கம்பியை பிடிக்க தவறி விடுகிறார்கள். அப்படி கம்பியை பிடிக்க தவறும் சில வினாடிகள் கூட அவர்களுக்கு எமனாக மாறி உள்ளது. நத்தம் அருகே தனியார் பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியை அடுத்த வி.எஸ் கோட்டை அருகேயுள்ள வையாளிப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அமராவதிக்கு 50 வயது ஆகிறது.இவர் நேற்று புதன்கிழமை காலை கோபால்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கணவாய்பட்டி கருப்பு கோயில் அருகே பேருந்து சென்ற போது அமராவதி பேருந்தில் இருந்து எதிர்பாராத விதமாக படிக்கட்டு வழியே கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அமராவதி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் அமராவதி தனியார் பேருந்தில் இருந்து தவறி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications