Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் பஸ்ஸில் ஒரு நொடி தவறு.. முடிந்து போன அமராவதி வாழ்க்கை.. தயவு செய்து இப்படி பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏறும் பலர் உட்கார இடம் கிடைக்காமல் போனால் நின்று கொண்டே வருகிறார்கள். அப்படி பேருந்தில் ஏறும் போது, டிக்கெட் எடுப்பதற்காக பணத்தை எடுக்கிறார்கள். அவர்கள் பணத்தை எடுக்கும் போது கம்பியை பிடிக்காமல் நிற்கிறார்கள். அந்த நேரத்தில் திடீரென டிரைவர் பிரேக் அடித்து வண்டியை ஓட்டினால் சட்டென வண்டியில் இருந்து பயணிகள் தவறிவிழுந்து விடுகிறார்கள். அப்படித்தான் திண்டுக்கல் தனியார் பேருந்தில் நடந்துள்ளது.

இன்றைக்கு பல்வேறு ஊர்களில் பேருந்துகளில் ஏறும் மக்கள், கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால், நின்று கொண்டே பயணிக்கிறார்கள். அப்படி பேருந்துகளில் உட்கார இடம் இல்லாத காரணத்தால், நின்று கொண்டே செல்லும் பயணிகள் திடீரென தவறி விழும் சம்பவங்கள் நடக்கின்றன. ஏனெனில் பேருந்தில் ஏறும் போது, டிக்கெட் எடுப்பதற்காக பணத்தை எடுக்கிறார்கள். அவர்கள் பணத்தை எடுக்கும் போது கம்பியை பிடிக்காமல் நிற்கிறார்கள்.

what happened to a woman named Amaravathi in Dindigul Natham private bus

அந்த நேரத்தில் திடீரென டிரைவர் பிரேக் அடிக்கும் போது, தவறி விழுகிறார்கள். சில பெண்கள் கம்பி எட்டாத காரணத்தால் சைடில் உள்ள கம்பி பிடித்து நிற்கிறார்கள். சைடு கம்பியை பிடித்து நிற்கும் போது சிலர், சாய்ந்து நின்று கொண்டு நிற்கிறார்கள். கம்பியை பிடிக்க தவறி விடுகிறார்கள். அப்படி கம்பியை பிடிக்க தவறும் சில வினாடிகள் கூட அவர்களுக்கு எமனாக மாறி உள்ளது. நத்தம் அருகே தனியார் பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியை அடுத்த வி.எஸ் கோட்டை அருகேயுள்ள வையாளிப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அமராவதிக்கு 50 வயது ஆகிறது.இவர் நேற்று புதன்கிழமை காலை கோபால்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கணவாய்பட்டி கருப்பு கோயில் அருகே பேருந்து சென்ற போது அமராவதி பேருந்தில் இருந்து எதிர்பாராத விதமாக படிக்கட்டு வழியே கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அமராவதி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் அமராவதி தனியார் பேருந்தில் இருந்து தவறி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+