குன்றத்தூர் ரூபாவதிக்கு இப்படியா ஆகணும்.. பல்லாவரம் சாலையை ஸ்தம்பிக்க வைத்த உறவினர்கள்
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்தூர் அருகே வசிக்கும் ரூபாவதி என்பவர் கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று உடல்நிலை சரியில்லாததால் இரண்டாம் கட்டளை பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அங்கு டாக்டர்கள் ஊசி போட்ட பிறகு அவருக்கு நடந்த சம்பவம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற செல்லும் போது, திடீரென எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. நன்றாகத்தான் இருப்பார்.. ஆனால் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிடுவார்கள். இது அவ்வப்போது நடக்கக்கூடிய நிகழ்வாகவே இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற நிலைக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக குற்றம்சாட்டப்படுகிறது. மருத்துவர் அலட்சியமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ சிசிச்சை அளித்ததில் நோயாளி உயிரிழந்திருந்தார் அது சிக்கலாக மாறுகிறது..

மற்றப்படி மருத்துவர்கள் உயிரை காப்பற்ற போராடுவார்கள்.. அதிலும் அவர் குணமாகமால் உயிரிழந்தால், அதற்கு மருத்துவர்கள் பொறுப்பில்லை.. அதேநேரம் சம்பந்தமே இல்லாமல், தவறான சிகிச்சை காரணமாக நோயாளி இறந்தால், அது டாக்டருக்கு மட்டுமல்ல பணிபுரியும் மருத்துவமனைக்கும் சிக்கலாகும்.. குன்றத்தூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரி என்பவருடைய மனைவி ரூபாவதிக்கு 54 வயது ஆகிறது. இவர் கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று உடல்நிலை சரியில்லாததால் இரண்டாம் கட்டளை பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு டாக்டர்கள் ஊசி போட்ட பிறகு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கு பரிசோதனை செய்து டாக்டர்கள் ரூபாவதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் குன்றத்தூர்- பல்லாவரம் செல்லும் சாலை, தரமா நகர் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தார்கள்.
இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ரூபாவதி கால்வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஊசி போட்ட சில நிமிடங்களில் திடீரென இறந்துவிட்டார்.இந்த விவாகரத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குன்றத்தூர் தரமா நகர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்?














Click it and Unblock the Notifications