2014-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. இதற்கும் செந்தில் பாலாஜி விவகாரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
சென்னை: குற்ற வழக்குகளில் சிக்கிய நபர்கள் அமைச்சரவையில் நீடிக்கலாமா? இல்லையா? என்பது குறித்து 2014- ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தற்போதைய தமிழக அரசியல் சூழலால், மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. அந்த தீர்ப்பு என்ன என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்து நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடியாக உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி நீக்கத்திற்கான காரணத்தை 5 பக்க கடிதம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்து இருந்தார். அதில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்பதற்காகவும், மாநிலத்தில் அரசியல் அமைப்பு சாசன நடைமுறையில் சீர்குலைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்வதாக ஆளுநர் கூறியிருந்தார்.

மேலும் அந்த கடிதத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக தனக்கு முதல்வர் எழுதிய கடிதங்களில் தேவையற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருந்ததாக ஆளுநர் சாடியிருந்தார். எனினும் சில மணி நேரங்களில் திடீர் திருப்பமாக செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, தற்காலிகமாக நிறுத்தி வைத்து முதல்வருக்கு ஆர்.என்.ரவி கடிதம் எழுதினார்.
2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு: அந்த கடிதத்தில், மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுரைக்கு ஏற்ப முந்தைய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஆளுநருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளித்து 6 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதில், 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்கவேண்டும்? யார் நீக்கப்படவேண்டும்? என்பதை முடிவு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அது முழுக்க, முழுக்க முதல்வரின் தனிப்பட்ட சிறப்பு உரிமையாக உள்ளது" என்று கூறியிருந்தார். செந்தில் பாலாஜி விவகாரத்தால் ஆளுநர் - முதல்வர் மு.க ஸ்டாலின் இடையே வெடித்துள்ள மோதலையடுத்து 2014- ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பேசு பொருளாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் அப்படி என்ன உள்ளது என்று பார்க்கலாம்.
அரசியல் சாசனத்திற்கு எதிரானது: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலே அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2014- ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பை அளித்தது. அப்போதைய தலைமை நீதிபதி ஆர் எம். லோதா தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை அளித்தது. அதில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர் என்பது அமலில் உள்ளது.
முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலே அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகுவது ஒரு மரபாக இருக்கிறது. அதே வேளையில், தீவிரமான குற்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசியல் சாசனத்தின் நோக்கத்திற்கு எதிரான ஒன்றாகும்.
பிரதமரின் முடிவு தான் இறுதியானது: விசரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடந்தால் அந்த நபரை பிரதமரோ, முதல்வரோ தங்கள் அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது. ஆனால் யாரை சேர்ப்பது என்பதில் பிரதமரின் முடிவுதான் இறுதியானது ஆகும். அரசியல் சாசன ரீதியான நம்பிக்கையை பிரதமரே சுமக்கிறார். எனவே அந்த நம்பிக்கையை காக்க வேண்டியதும் அவர்தான்.
அரசியல் சாசனப்படி பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று பிரதமர் மீது எதிர்பார்ப்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை அப்படியே மாநிலத்திற்கு ஒப்பிட்டு பார்த்தால், அமைச்சரவையில் யாரை சேர்க்க வேண்டும் என்பதில் மாநில முதல்வருக்கு முழு உரிமை இருப்பதாக காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் கூறும் கருத்தாக உள்ளது.
-
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications