அகவிலைப்படி என்றால் என்ன? இந்த டிஏ அறிவிப்புகளை பார்த்தாலே அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைவது ஏன்?
சென்னை: அகவிலைப்படி என்றால் என்ன? இந்த அறிவிப்புகளை பார்த்தாலே மத்திய அரசு ஊழியர்களும், தமிழ்நாடு அரசு ஊழியர்களும் மகிழ்ச்சி அடைவது ஏன்? என்பதை பார்ப்போம்..
அகவிலைப்படி என்றால் என்ன?: அகவிலைப்படி என்பது மக்கள் மீதான பணவீக்கத்தின் தாக்கத்தைத் தணிக்க, அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தின் ஒரு பகுதியாக அலவன்ஸ் ஆக வழங்கப்படும் தொகையாகும். இதை தூய தமிழில் சொல்வது என்றால், கொடுப்பனவு ஆகும். அதாவது, நாட்டின் பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் ஒரு ஊழியரின் டிஏ (அலவன்ஸ்) சதவீதம் உயர்த்தப்படுகிறது. அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள சதவீதத்தைப் பயன்படுத்தி அலவன்ஸ் (டிஏ) தீர்மானிக்கப்படுகிறது.

அகவிலைப்படி என்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அலவன்ஸ் தருகிறது
தமிழக அரசும், ஒவ்வொரு ஆண்டும் 2 முறை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்த பிறகு, தமிழக அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்.
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை கடந்த மார்ச் 7ம் தேதி அன்று, 4 சதவீதம் உயர்த்தியது.. அதாவது 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியது. கடந்த ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சரவை அறிவித்திருந்தது. இந்த உயர்வால் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பயனடைவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 17-ந் தேதி அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது. அதன்பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அகவிலைப்படி உயர்வு அறிவித்தார். இதனால் 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனிடையே மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்த ஒரே வாரத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.
இதன்படி தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், " மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து, 1.7.2023 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 1.1.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில (தமிழக) அரசு பணியாளர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 1.1.2024 முதல் உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழக அரசின் இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2,587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்பதால், அரசின் இந்த அறிவிப்பை பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
-
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications