Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழக சட்டசபை மரபு என்ன!" தேசிய கீதம் வாசிக்கவில்லை என்ற ஆளுநருக்கு Ex சபாநாயகர் ஆவுடையப்பன் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஆரம்பத்தில் தேசிய கீதம் வாசிக்கப்படவில்லை என்று ஆளுநர் ரவி கூறியிருந்த நிலையில், இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அடுத்த வாரம் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தான் தொடங்கும்.

What is tradition followed for National Anthem TN assembly ex speaker Avudaiappan reply to Governor Ravi

அதன்படி இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இன்று கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவையில் நடந்தது முற்றிலும் வேறாக அமைந்தது.

மறுப்பு: இன்று காலை வழக்கம் போலச் சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் இரண்டு காரணங்கள் சொல்லியிருந்தார். அதாவது பொதுவாக ஆளுநர் உரை என்பது அரசின் பாலிசி உரை தான். இதை அரசு தான் தயார் செய்து கொடுக்கும்.. அதை ஆளுநர் வாசிக்க மட்டுமே செய்வார். ஆனால், தமிழக அரசின் உரையில் உள்ள சில கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் எனவே இதை வாசித்தால் அரசியல் சாசன பதவியை கேலிக்குள்ளாக்குவதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

அதைவிட முக்கிய காரணமாகத் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதாவது தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் எனத் தான் குறிப்பிட்டதாகவும் இருப்பினும் தொடக்கத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த இரண்டு காரணங்களையும் குறிப்பிட்ட ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்கவே இல்லை. தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் விடுவது இதுவே முதல்முறை.

மரபு என்ன: இதற்கிடையே தமிழ்நாடு சட்டசபையின் மரபு என்ன.. ஆளுநர் செயல்பாடுகள் சரியா என்பது குறித்து முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாகத் தனியார் டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.. அதன் பிறகு சட்டசபை நடவடிக்கைகள்.. முடிவில் தேசிய கீதம். இதுதான் நடைமுறை.. தமிழ்நாடு சட்டசபையின் நடைமுறை இதுதான். அனைத்து விஷயங்களிலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற முடிவில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல ஆளுநரின் இதுபோன்ற செயல்பாடுகள் திமுகவுக்கு நல்லதுதான்.. எங்கள் குற்றச்சாட்டுகள் சரி என்பதற்கு இது வலுசேர்க்கிறது. அவர் எப்போதும் அரசுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற மனநிலையில் உள்ளார். ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என்று நாங்கள் சொல்வதற்கான காரணமே இதுதான்.

What is tradition followed for National Anthem TN assembly ex speaker Avudaiappan reply to Governor Ravi

மாற்ற வேண்டும்: நியமன பொறுப்பில் இருக்கும் ஒருவர் மரபுக்கு எதிராக நடந்து வருகிறார். தனக்கு விதிவிலக்கு இருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, அவரை மாற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மரபு இருக்கும்.. அதன்படி தமிழ்நாட்டில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.. அதன் பிறகு சட்டசபை நடவடிக்கைகள்.. முடிவில் தேசிய கீதம். இதுதான் மரபு.. இந்த மரபை அவரால் மாற்ற முடியாது" என்று அவர் தெரிவித்தார். கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்தவர் ஆவுடையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+