மிலாடி நபி எப்போது? தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. முழு விபரம்
சென்னை: பிறை தென்பட்டதால் தமிழகத்தில் மிலாடி நபி கொண்டாடப்படும் தேதியை அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக மிலாடி நபி உள்ளது. இது நபிகள் நாயகத்தின் நினைவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நபிகள் நாயகத்தின் பிறந்தநாளும், மறைந்த நாளும் ஒரே தேதியாகும்.

63 வயது வரை வாழ்ந்த நபிகள் நாயகம் கிபி 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ல் இவ்வுலகை துறந்தார். நபிகள் நாயகம் அனைத்து மனிதர்களுக்கும் அன்பு மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்பினார். அல்லாவின் தூதராக கருதப்படும் அவரது நினைவை போற்றும் வகையில் முதல் முதலில் எகிப்தில் மிலாடி நபி கொண்டாடப்பட்டது.

தற்பாது நபிகள் நாயகத்தின் நினைவாகவும், அவரது போதனைகளுக்காகவும் மிலாடி நபி ஒவ்வொரு ஆண்டும் கொண்டப்படப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தமிழகத்தில் மிலாடி நபி வரும் 28 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். பிறை தெரிந்ததால் தமிழகத்தில் மிலாடி நபி செப்டம்பர் மாதம் 28 ம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications