அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்..? வானிலை மையம் கூறியது இது தான்..!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் முதல் அந்தமான் கடற்பகுதி வரை மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உள் மாவட்டங்களை பொறுத்தவரை லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம் பர் 15-ம் தேதியன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவம்வர் 16-ம் தேதியன்று நாகை, புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் மீனவர்களை எச்சரித்துள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் பதிவாக கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளான இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications