Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாப் டூ பாட்டம்.. பேட்டிங்கில் செம மாஸ்... இந்த சீசனில் கர்ஜிக்கும் பேட்டிங் கொண்ட அணி எது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை எதிரணிகளுக்கு அச்சமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தொடக்க வீரர்கள் முதல் 8ஆம் நிலையில் ஆடும் தீபக் சஹர் வரை அனைவரும் பேட்டிங் மூலம் ஆட்டத்தை மாற்றும் வல்லமை கொண்டவர்கள் என்பதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்திலேயே அனைத்து அணிகளும் தங்கள் அணிகளுக்கு தேவையான சிறந்த வீரர்களை ஏலத்தில் வாங்கியது.

குறிப்பாக ஆல் ரவுண்டர்களான சாம் கரண், கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பெரும் தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டனர். இதன் மூலம் முக்கிய அணிகளில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் ஐபிஎல் போட்டிகள்

சொந்த மண்ணில் ஐபிஎல் போட்டிகள்

அதேபோல் ஏலத்திற்கு பின் ஒவ்வொரு அணியையும் பார்க்கும் போது ராஜஸ்தான் மற்றும் சென்னை அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதிலும் சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் அனுபவமும், இளமையும் கலந்து வீரர்கள் சரிவர சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் 7 போட்டிகளை விளையாட உள்ளதால், சென்னை மைதானத்திற்கு ஏற்ப வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்திற்கான வீரர்கள்

சேப்பாக்கம் மைதானத்திற்கான வீரர்கள்

அதேபோல் வலதுகை மற்றும் இடதுகை பேட்ஸ்மேன்கல் சீரான வரிசையில் உள்ளதால், எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் வரிசையை தோனியால் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். ருதுராஜ் மற்றும் கான்வே ஆகியோரே சென்னை அணியின் தொடக்க வீரர்களாக விளையாட உள்ளனர். இதில் ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் பவர் ப்ளே ஓவர்களில் குறைந்தது 50 ரன்கள் அளவிற்கு எடுக்கக் கூடிய வீரர்கள். அதேபோல் இருவருமே ஸ்பின்னர்களை சிதறடிக்கும் திறமைக் கொண்டவர்கள்.

இடதுகை - வலதுகை பேட்டர்கள்

இடதுகை - வலதுகை பேட்டர்கள்

அதேபோல் 3ஆம் நிலையில் வரும் மொயின் அலி, எதிரணி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்குவதற்காகவே சேர்க்கப்பட்டுள்ள வீரர். ஆட்டத்தின் எந்த சூழலிலும் அதிரடியை குறைக்க வேண்டாம் என்று சிஎஸ்கே நிர்வாகம் மொயின் அலிக்கு அறிவுறுத்தியுள்ளது. 4ஆம் நிலையில் ஆடும் ராயுடு சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை விளையாடுபவர். இவருக்கு பின் பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, தோனி ஆகியோரும் தேவைக்கேற்ப அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடும் தன்மை கொண்டவர்கள்.

 8 வீரர்கள் முழுமையான பேட்ஸ்மேன்

8 வீரர்கள் முழுமையான பேட்ஸ்மேன்

அதுமட்டுமல்லாமல் தீபக் சஹரும் அதிரடியான பேட்டிங் செய்யும் திறமை கொண்டவர். இதனால் சென்னை அணியின் 8ஆம் நிலையில் ஆடும் வீரர்கள் வரை பேட்டிங் வரிசை நீண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய வரவான பென் ஸ்டோக்ஸை, தோனி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் தொடக்க வீரர், மிடில் ஆர்டர், ஃபினிஷர் என்று பென் ஸ்டோக்ஸ் தேவைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளக் கூடிய வீரர்.

 முறுக்கேறி வந்துள்ள தோனி

முறுக்கேறி வந்துள்ள தோனி

சேஸிங்கின் போது டார்கெட் பெரிதாக இருக்கும் பட்சத்தில் மொயின் அலி இடத்தில் கூட பென் ஸ்டோக்ஸ் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ஜடேஜாவின் அதிரடி எப்படி வெடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இதனிடையே தோனியும் தனது கடைசி ஐபிஎல் தொடருக்காக முறுக்கேறி வந்து நிற்பதால், ஐபிஎல் தொடரிலேயே சென்னை அணியின் பேட்டிங் வரிசை எதிரணிகளுக்கு அச்சத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+