கைலாசநாதனை அனுப்புங்க.. மோடியின் லெப்ட் ஹேண்ட்.. தெற்கிற்கு டெல்லி அனுப்பிய மாஸ்டர்மைண்ட்! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள குனியில் கைலாசநாதன் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். மோடி டெல்லி அரசியலுக்கு போன பின் குஜராத்தில் ஆட்சியை கவனிக்க குனியில் கைலாசநாதனை மோடிதான் களமிறங்கினார்.

குனியில் கைலாசநாதன் ஓய்வுபெற்ற 1979 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார், இவர் தற்போது புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இதற்கு முன்பு 2013 முதல் 2014 வரை அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தலைமை முதன்மைச் செயலாளராக பணியாற்றினார். அதன்பிறகு, அவர் ஜூன் 30, 2024 வரை அதே பதவியில் பணியாற்றினார்.

governor delhi cp radhakrishnan

இவர் கேரளாவில் பிறந்தாலும்.. தமிழ்நாட்டில்தான் வளர்ந்தார். அவர் ஊட்டியில் வளர்ந்தார், அங்கு அவரது தந்தை தபால் துறையில் பணிபுரிந்தார். குனியில் கைலாசநாதன், செப்டம்பர் 1, 1981 இல் உதவி கலெக்டராக ஜூனியர் டைம்ஸ்கேலாக தனது பணியை தொடங்கினார். அவர் சுரேந்திரநகர் (1985) மற்றும் சூரத் (1987) கலெக்டராக பணியாற்றினார்.

குஜராத் பணிகள்: குஜராத் கடல்சார் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார். நகர்ப்புறத் துறையில், அவர் 1999 முதல் 2001 வரை அகமதாபாத்தின் முனிசிபல் கமிஷனராகவும் [2] குஜராத்தின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் துறையின் (யுடிடி) முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றினார். UDD இல் இருந்தபோது, ​​அகமதாபாத்திற்கு பேருந்து விரைவான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கிய வழிகாட்டுதல் குழுவின் தலைவராக இருந்தார்.

மோடிக்கு நெருக்கம்: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள குனியில் கைலாசநாதன் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். மோடி டெல்லி அரசியலுக்கு போன பின் குஜராத்தில் ஆட்சியை கவனிக்க குனியில் கைலாசநாதனை மோடிதான் களமிறக்கினார்.

நேற்று பல்வேறு ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். அதில் முக்கியமாக மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜார்க்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்புகளை கவனித்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தேசிய அளவில் பாஜக ஆட்சியை காப்பாற்றவும், மாநில அளவில் ஆட்சி கவிழாமல் இருக்கவும் மகாராஷ்டிரா அரசியல் முக்கியம். அப்படி இருக்க அங்கே ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். தெலுங்கானா ஆளுநராக விஷ்ணு தேவ் வர்மா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மற்ற ஆளுநர்கள்: பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பஞ்சாப்பிற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மண் ஆச்சாரியாவிற்கு மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பக்தே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சி எச் விஜயசங்கர் மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குலாப் சந்த் கட்டாரியாவிற்கு, சண்டிகர் துணை நிலை ஆளுநர் பொறுப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். IAS அதிகாரியான கைலாசநாதன் மோடிக்கு மிகவும் நெருக்கம். மோடியுடன் மிக நெருக்கமாக பழகும் சிலரில் இவரும் ஒருவர். ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சந்தோஷ் குமார் கங்குவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+