Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்.. சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு? ரேஸில் இருக்கும் 2 அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற விவாதம் நடந்து வரும் சூழலில், சங்கர் ஜிவாலே தேர்தல் வரை டிஜிபியாக தொடர வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியை நிலைநாட்டும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி. தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அந்த பொறுப்பில் சங்கர் ஜிவால் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட திமுக ஆட்சி அமைத்தது முதல் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் இருக்கிறார். இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

Shankar Jiwal DGP Tamilnadu

இதன் காரணமாக அடுத்த டிஜிபியை தேர்வு செய்யத் தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது. டிஜிபி-யாக ஒருவர் தேர்வு செய்யப்பட 30 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்க வேண்டும்.அதேபோல் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது மத்திய அரசின் பணிகளில் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் டிஜிபியாக தேர்வு செய்யும் நபர் மீது சிபிஐ மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கக் கூடாது.

இந்த 3 விதிகளின் அடிப்படையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள 8 ஐபிஎஸ் அதிகாரிகளைத் தமிழக உள்துறை தேர்வு செய்து யுபிஎஸ்சி கமிட்டிக்கு அனுப்பும். அதில் இருந்து 3 பேரைத் தேர்வு செய்து தமிழ்நாட்டு அரசுக்கு யுபிஎஸ்சி கமிட்டி பரிந்துரைக்கும். இறுதியாக அந்த 3 பேரில் இருந்து முதல்வர் பரிந்துரையின் அடிப்படையில் டிஜிபி நியமனம் செய்யப்படுவார்.

அதன்படி அடுத்த டிஜிபி ரேஸில் சந்தீப்ராய் ராத்தோர், சீமா அகர்வால், அபே குமார் சிங், வன்னியப் பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் குமார் வான்கடே, ராஜீவ் குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சந்தீப் ராய் ராத்தோர் ஏற்கனவே போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபியாக பணியாற்றி வருகிறார்.

அதேபோல் சீமா அகர்வாலும் ரேஸில் முந்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய டிஜிபி தொடர்பாக இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், டிஜிபியாக சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கலாமா என்று ஆட்சி மேலிடத்திற்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தங்கள் மீது கட்சி சாயம் பூசப்பட வாய்ப்பு உள்ளது என்று அடுத்த டிஜிபி ரேஸில் இருக்கும் முக்கிய அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் தமிழக அரசின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+