தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்.. சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு? ரேஸில் இருக்கும் 2 அதிகாரிகள்!
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற விவாதம் நடந்து வரும் சூழலில், சங்கர் ஜிவாலே தேர்தல் வரை டிஜிபியாக தொடர வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியை நிலைநாட்டும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி. தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அந்த பொறுப்பில் சங்கர் ஜிவால் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட திமுக ஆட்சி அமைத்தது முதல் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் இருக்கிறார். இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இதன் காரணமாக அடுத்த டிஜிபியை தேர்வு செய்யத் தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது. டிஜிபி-யாக ஒருவர் தேர்வு செய்யப்பட 30 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்க வேண்டும்.அதேபோல் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது மத்திய அரசின் பணிகளில் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் டிஜிபியாக தேர்வு செய்யும் நபர் மீது சிபிஐ மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கக் கூடாது.
இந்த 3 விதிகளின் அடிப்படையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள 8 ஐபிஎஸ் அதிகாரிகளைத் தமிழக உள்துறை தேர்வு செய்து யுபிஎஸ்சி கமிட்டிக்கு அனுப்பும். அதில் இருந்து 3 பேரைத் தேர்வு செய்து தமிழ்நாட்டு அரசுக்கு யுபிஎஸ்சி கமிட்டி பரிந்துரைக்கும். இறுதியாக அந்த 3 பேரில் இருந்து முதல்வர் பரிந்துரையின் அடிப்படையில் டிஜிபி நியமனம் செய்யப்படுவார்.
அதன்படி அடுத்த டிஜிபி ரேஸில் சந்தீப்ராய் ராத்தோர், சீமா அகர்வால், அபே குமார் சிங், வன்னியப் பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் குமார் வான்கடே, ராஜீவ் குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சந்தீப் ராய் ராத்தோர் ஏற்கனவே போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபியாக பணியாற்றி வருகிறார்.
அதேபோல் சீமா அகர்வாலும் ரேஸில் முந்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய டிஜிபி தொடர்பாக இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், டிஜிபியாக சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கலாமா என்று ஆட்சி மேலிடத்திற்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தங்கள் மீது கட்சி சாயம் பூசப்பட வாய்ப்பு உள்ளது என்று அடுத்த டிஜிபி ரேஸில் இருக்கும் முக்கிய அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் தமிழக அரசின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications