மாமனாரின் அத்துமீறல்.. கையில் "பிளேடு"டன் மருமகளை நெருங்கி.. சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரே அக்கிரமம்
சென்னை: சென்னை ஆழ்வார்திருநகரில் நடந்த சம்பவமானது, அந்த பகுதி மக்களிடம் பெருத்த கொந்தளிப்பை உண்டுபண்ணி வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
சென்னை ஆழ்வார்திருநகர் மீனாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், 21 வயது பெண்ணை காதலித்து வந்தார்.. பிறகு, 4 வருடங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்..

வாடகை வீடு: இப்போது இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.. தற்போது, ஆழ்வார்திருநகர் திருவள்ளுவர் சாலையில், ஒரு வீட்டில் இந்த தம்பதியினர் வாடகைக்கு இருந்து வருகிறார்கள்.
இளைஞர் பெயிண்ட்டர் வேலை பார்த்து வருகிறார்.. அதனால், காலையிலேயே வேலைக்கு சென்றுவிட்டால், சாயங்காலம்தான் வீட்டுக்கு வருவார்.. ஆனால், திருமணமான நாளில் இருந்தே, மருமகள் மீது, மாமனார் சரவணனுக்கு ஒரு கண் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. மாமனாரும் பெயிண்ட்டர் வேலைதான் செய்து வருகிறார் என்றாலும், தனியாக வீட்டில் இருக்கும் நேரங்களில் மருமகளை தப்பான எண்ணத்துடனும் பார்த்து வந்தாராம்.
பிளேடு: இப்படித்தான் நேற்று முன்தினமும், 2 வயது குழந்தையுடன் மருமகள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மாமனார் திடீரென கடைக்கு சென்று, ஆசிட் பாட்டில், பிளேடு போன்றவற்றை வாங்கிக்கொண்டு மருமகள் வீட்டுக்குள் நுழைந்தாராம்.. பிறகு, கதவையும் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, மருமகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளர்.. இதனால் கடுமையான அதிர்ச்சி அடைந்த மருமகள், மாமனாரிடமிருந்து தப்ப முயன்றுள்ளார்.
உடனே மாமனார், கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட், பிளேடை எடுத்துகாட்டி மிரட்டியிருக்கிறார்.. தான் சொல்லும்படி நடக்காவிட்டால், ஆசிட்டை ஊற்றி, பிளேடால் வெட்டிவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.. அத்துடன், பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
வழக்கு பதிவு: இறுதியில் விஷயம் கோயம்பேடு மகளிர் ஸ்டேஷன் வரை போய்விட்டது.. மருமகளை சீரழித்த மாமனார் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இப்போது மாமனார் ஜெயிலில் உள்ளார்.
மருமகள் என்றும் பாராமல், பிளேடு, ஆசிட்டை வைத்து மிரட்டி, கொடூரமாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications