திமுக சந்திச்சா காவிரி பிரச்சினை! நாங்க நிர்மலா சீதாராமனை சந்திச்சா கூட்டணி பேச்சா! எடப்பாடி கேள்வி
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எதற்காக சந்தித்தார்கள் என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜகவினர் கூறுகையில் அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பேசி வருகிறோம் என்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கூட்டணி முறிவு முடிவு எடுத்தது எடுத்ததுதான். எந்த சூழலிலும் மாற்றமில்லை என கூறிவிட்டார்.

கூட்டணி முறிவு ஏற்பட்டவுடனே அதிமுகவினரும் பாஜகவினரும் நன்றி மீண்டும் வராதீங்க என ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு ஏற்பட்டதற்கு உண்மையான காரணத்தை அறியும் பொறுப்பை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். ஒவ்வொரு பாஜக நிர்வாகியிடமும் நிர்மலா சீதாராமன் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதை அறிக்கையாக தயாரித்து பாஜக மேலிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்படைத்தார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுக கூட்டணி மற்றும் பாஜக எதிர்காலம் ஆகியவை தொடர்பாக நிர்வாகிகளின் ஒட்டுமொத்த கருத்துகளை அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அது பாஜகவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காமல் போகும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட முயற்சிகள் செய்யப்பட வேண்டும். அது வரை அதிமுகவையோ அவர்களுடைய தலைவர்களையோ யாரும் விமர்சிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள அந்த தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஒரு வேளை அதிமுக ஏதாவது நிபந்தனைகளை விதித்தால் அதை பரிசீலனை செய்யலாம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் தமிழக பாஜகவுக்கு நல்லது என நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், என்ன நீங்கள் நினைத்த முடிவை எடுத்ததற்கு சந்தோஷமா என கேட்டார். மேலும் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை என்பதை போல எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் பாஜக மாநில துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமியோ அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார். இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை வந்த நிர்மலா சீதாராமனை பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 4 அதிமுக எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து பேசினர்.
இது பல்வேறு யூகங்களை கிளப்பியது. கூட்டணி பிளவுக்கு காரணத்தை கண்டறிய வந்த நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு என்பதால் கூட்டணி குறித்து பேசுகிறார்களோ என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் இதுகுறித்து பொள்ளாட்சி ஜெயராமன் கூறுகையில் தென்னை விவசாயிகளின் உரிமைகளை மீட்கவே நிர்மலா சீதாராமனை சந்தித்தோம். மற்றபடி அது அரசியல் சார்ந்த சந்திப்பு அல்ல என தெளிவுப்படுத்தினார்.
இந்த நிலையில் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருப்பதாக சொல்கிறீர்கள், பிறகு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் எதற்காக சந்தித்து பேசினார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு எடப்பாடி பதிலளிக்கையில், எம்எல்ஏக்கள், எம்பிக்களை எதற்காக தேர்வு செய்கிறோம் என சொல்லுங்கள். அதற்கு நிருபர்கள் தொகுதி பிரச்சினைகளை தீர்க்கும் மக்கள் பிரதிநிதிகள் என்றனர். ஆம்! தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஏற்கெனவே டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலாவை பொள்ளாட்சி ஜெயராமன் சந்தித்துள்ளார்.
அந்த வகையில்தான் கோவை வந்த போதும் அந்த கோரிக்கை குறித்து வலியுறுத்தவே அமைச்சர் நிர்மலாவை சந்தித்தாரே தவிர கூட்டணி பேச்செல்லாம் இல்லை. திமுக எம்பிக்கள் எதற்காக மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்தார்கள், அவர்கள் சந்தித்தால் காவிரி பிரச்சினைக்காக , நாங்கள் சந்தித்தால் கூட்டணிக்கு என எழுதுவதா என கேள்வி எழுப்பினார்.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே












Click it and Unblock the Notifications