விரக்தி.. ஏமாற்றம்.. பரபரத்த அந்த 23 மணி நேரம்.. சசிகலாவின் திடீர் முடிவிற்கு பின் நடந்தது என்ன?
சென்னை: தமிழக அரசியலில் இருந்து திடீர் என்று விலகுவதாக சசிகலா எடுத்த முடிவிற்கு பின் என்ன நடந்தது என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்து இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்தபின் அதிமுகவின் லெட்டர் பேடை பயன்படுத்தி வந்த சசிகலா தற்போது வெறும் ஏ4 பேப்பரில் தனது விலகல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கூறி அதிமுகவின் ஆட்சிக்கு வழிவிட்டு சசிகலா இந்த முடிவை அறிவித்துள்ளார். சசிகலாவின் இந்த முடிவிற்கு பின் என்ன நடந்தது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

சசிகலா
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த நாளே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். அதிலும் பெங்களூரில் இருந்து இவர் காரில் சென்னைக்கு வந்ததே பெரிய திருவிழா போல நடைபெற்றது. 23 மணி நேரம் காரில் பயணம் செய்து, தொண்டர்கள் புடைசூழ சசிகலா சென்னைக்கு வந்தார்.

சென்னை
சசிகலா சென்னைக்கு வந்த தோரணையே அவர் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த 23 மணி நேர பயணமே அதிமுகவில் பெரிய அளவில் கிலியை ஏற்படுத்தியது. இவரின் வருகைக்காக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது உட்பட பல்வேறு காரணங்களால் சசிகலா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது.

ஆனால்
ஆனால் தமிழகம் வந்த பின் சசிகலா பெரிதாக அரசியல் நிகழ்வு எதிலும் பங்கேற்கவில்லை. அதிமுகவை பற்றி எங்கும் அதிரடியாக சசிகலா பேசவில்லை. சில சினிமா நட்சத்திரங்களை, அரசியல் தலைவர்களை சசிகலா சந்தித்தார், அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கை விசாரிக்கும்படி துரித்தப்படுத்தினார். இதை தவிர சசிகலா பெரிதாக வேறு எதுவும் செய்யவில்லை.

ஓய்வு
இத்தனை நாட்கள் ஓய்வில் இருந்த சசிகலா தற்போது அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வை அறிவித்துள்ளார். இவரின் இந்த முடிவிற்கு பல காரணங்கள் உள்ளன. அதிமுகவை இனியும் மீட்க முடியாது என்று விரக்தியின் உச்சத்திற்கு சென்றுதான் சசிகலா இந்த முடிவை அறிவித்தார் என்று கூறுகிறார்கள். கட்சியை இனியும் கட்டுக்குள் கொண்டு வருவது கடினம் என்று அவர் நினைப்பதாக கூறுகிறார்கள்.

அரசியல் வேண்டாம்
அதோடு சசிகலா போட்ட கணக்கு எதுவும் வேலை செய்யவில்லை, அதிமுகவிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை, பாஜக மூலம் அதிமுக உள்ளே செல்ல செய்த முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது, கட்சிக்குள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிந்து சசிகலா இந்த முடிவை எடுத்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.

அதிமுக தோல்வி காரணம்
இன்னொரு பக்கம் அதிமுக இந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால் அதற்கு தான் காரணமாக இருந்து விட கூடாது என்று சசிகலா கருதுகிறார். தன்னால் வாக்குகள் சிதற கூடாது என்று சசிகலா நம்புகிறார். அப்படி நடந்தால் மட்டுமே தேர்தலுக்கு பின் அதிமுகவில் இணைய முடியும் என்று சசிகலா நம்புவதாக கூறுகிறார்கள்.

நம்பிக்கை
அதிமுகவின் தோல்விக்கு தான் காரணமாக இருந்துவிட கூடாது. தேர்தலுக்கு பின் மற்ற விஷயங்களை பார்த்துக்கொள்ளலாம், தேர்தல் வரை சைல்ட்டாக இருக்கலாம் என்று சசிகலா நினைப்பதாக கூறுகிறார்கள். இதுதான் அவரின் இந்த திடீர் முடிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.. இதனால் சசிகலாவின் இந்த முடிவு தற்காலிக முடிவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications